தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மின்சார நிலை கட்டணத்தை திரும்பப்பெறுக தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு வலியுறுத்தல்

16 May 2026, 1:19 am
மின்சார நிலை கட்டணத்தை திரும்பப்பெறுக தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு வலியுறுத்தல்
<p><strong>மின்சார நிலை கட்டணத்தை திரும்பப்பெறுக தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு வலியுறுத்தல்</strong></p><p>​​​​​​​கோவை, மே 15- மின்சார நிலை கட்டணத்தை திரும்பப்பெற தமிழக அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கோவை யிலுள்ள 25 தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. </p><p>கோவையில் தொழில் அமைப்பு களின் கூட்டமைப்பினர் வெள்ளி யன்று செய்தியாளர்களை சந்தித்த னர். </p><p>அப்போது புதிய அரசிடம் உள்ள எதிர்பார்ப்புகள் குறித்து அந்த அமைப் பின் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் பேசுகையில், தொழில் துறையின ருக்கு நெருக்கடி ஏற்படுத்தும், மின் சார நிலை கட்டணத்தை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும். </p><p>குறுந் தொழில் வாரியம் ஒன்றை அரசு ஏற்ப டுத்தி கொடுக்க வேண்டும். மாநில சரக்கு மற்றும் வரி (SGST) அதிகாரி கள் 2007க்கு பின்பு அனுப்பப்பட்ட நோட்டீஸ்களை திரும்பப்பெற வேண் டும். </p><p>தமிழகத்தில் 717 மதுக்கடைகள் அகற்றப்பட்டுள்ளதை வரவேற்கின் றோம். </p><p>தொழில் சாலைகள் அதிகம் நிறைந்த பகுதியில் இருக்கும் மதுக் கடைகள், எப்எல்2 மதுக்கடைக ளால் தொழிலாளர்கள் குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றது. </p><p>தமிழ்நாட்டி லுள்ள அத்தனை மதுக்கூடங்களை யும் மூட வேண்டும். </p><p>எரிபொருட்கள் விலை உயர்வு கோவையில் சிட்கோவை தவிர வேறு தொழிற்பேட்டைகள் எதுவும் இல்லை. </p><p>கோவை பகுதியில் இருக் கும் இடங்களில், சிறு சிறு தொழிற் பேட்டைகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். </p><p>பதிவுத்துறையால் ஏற்ப டும் நெருக்கடிகளை களைய வேண் டும். </p><p>கோவை சிட்கோ தொழிற் பேட்டையில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். </p><p>மேலும், எரிபொருட்கள் விலை உயர்வை ஏற் படுத்தி ஒன்றிய அரசு எதிர்பார்க்காத அதிர்ச்சியை கொடுத்துள்ளது. </p><p>2012 - 13களில் 120 டாலருக்கு கச்சா எண் ணெய் கிடைத்த போது, 65 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் கிடைத்தது. </p><p>ஆனால், இப்போது பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. </p><p>எரிபொருட்கள் விலை உயர்வு கார ணமாக தனிமனித பாதிப்புகள் ஏற்ப டும். </p><p>எல்லா சுமையினையும் தொழில் துறை மீதே சுமத்தாமல் அரசே ஏற் றுக்கொள்ள வேண்டும். </p><p>மூலப்பொருள் வங்கி மூலப்பொருட்கள் விலையேற் றம் காரணமாக தொழில் முனை வோர் கடுமையாக பாதிக்கப்படு கின்றனர்.</p><p> தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மூலப்பொருள் வங்கி உருவாக்கப்பட வேண்டும், அனைத்து மூலப்பொருட்களையும் குறைந்த விலையில் கிடைக்க நடவ டிக்கைகள் எடுக்க வேண்டும். </p><p>பிரத மரின் சமீபத்திய வேண்டுகோளை பார்க்கும் போது அச்சம் ஏற்படுகி றது. </p><p>ஐடி சார்ந்த தொழிற்துறையின ருக்கு வீட்டிலிருந்தபடியே வேலை (work from home) என்பது சரியாக இருக்கும்.</p><p> சிறு, குறு தொழில் துறை யினர் இயந்திரங்களை வீட்டில் வைத்து ஓட்ட முடியாது, என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.