திருப்பூரில் காபி வித் கலெக்டர் கலந்துரையாடல் நிகழ்ச்சி
27 Dec 2025, 6:08 pm
<p><strong>திருப்பூரில் காபி வித் கலெக்டர் கலந்துரையாடல் நிகழ்ச்சி</strong></p>
<p>திருப்பூர், டிச.27- திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தன் னார்வ பயிலும் வட்டம் பயிற்சி மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தொகுதி 2 மற்றும் 2 எ முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்ற 26 தேர்வர்களை முதன்மை தேர்வுக்கு தயார்படுத்த ஊக்கப்படுத்தும் விதமாக காபி வித் கலெக்டர் என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி சனி யன்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் மாணவ, மாணவியர்கள், மருத்து வம் மற்றும் பல் மருத்துவம் பயிலும் முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கத்தினருடன் வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சியர் நேரில் அழைத்து வாரம் ஒருமுறை கலந்து ரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சி யாக சனியன்று 9 ஆவது கலந்துரையாடல் நிகழ்ச்சி தன்னார்வ பயிலும் வட்டம் பயிற்சி மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியா ளர் தேர்வாணையம் நடத்திய தொகுதி 2 மற்றும் 2 எ முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்ற 26 தேர்வர்களை முதன்மை தேர்வுக்கு தயார்படுத்த ஊக்கப்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே தலைமையில் கலந்துரையாடி னார். இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தேர்வர்களிடம் கல்வியின் அவசியம், உயர்ந்த குறிக்கோள், சமூக ஊடகத்தின் தாக்கம், உடல் மற்றும் மனநலம், தனித்தி றன்கள் குறித்து கலந்துரையாடினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் க.கார்த்தி கேயன், கோவை மண்டல இணை இயக்குநர் (வேலை வாய்ப்பு) ஜோதிமணி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ் மற்றும் தேர்வர்கள் கலந்து கொண்டனர்.</p>
