பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ அலுவலகம்: முதல்வர் திறந்து வைத்தார்
13 Jul 2026, 9:56 pm
<p><strong>பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ அலுவலகம்: முதல்வர் திறந்து வைத்தார்</strong></p><p>பெரம்பூரில் தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தையும், அதில் இயங்கும் இ-சேவை மையத்தையும் முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார். தேர்தல் வெற்றிக்குப் பின் 2 மாதங்களுக்குப் பிறகு முதன்முறையாக பெரம்பூர் தொகுதிக்கு விஜய், வருகை தந்தார். பெரம்பூரில் உள்ள ரேசன் கடையில் ஸ்மார்ட் ரேசன் கார்டு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர், முதற்கட்டமாக 50 பேருக்கு புதிய அட்டைகளை வழங்கியதோடு, 10 குடும்பங்களுக்கு அடையாளமாக ரேசன் பொருட்களையும் வழங்கினார்.</p>
