புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் திட்டம் தொடக்கம்!
yesterday
<p>பெரம்பூரில் புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்.</p><p>தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, தனது சொந்த தொகுதியான பெரம்பூருக்குச் சென்ற முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை இன்று திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தையும் திறந்து வைத்தார்.</p><p>இதனை தொடர்ந்து, புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, பெரம்பூர் தொகுதியை சேர்ந்த 10 பயணாளிகளுக்கு குடும்ப அட்டைகளை வழங்கினார்.</p><p>இம்மாத இறுதிக்குள் 73,000 பேருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><p><br></p>
