தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

250 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!

yesterday
250 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
<p>மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கத்தின், 250 புதிய பேருந்துகளின் சேவையைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்.</p><p>சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், 697 கோடி ரூபாய் செலவில் 625 தாழ்தள மின்சாரப் பேருந்துகள் ஐந்து பணிமனைகள் மூலம் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.</p><p>இதனைத் தொடர்ந்து. 1,337 கோடி ரூபாய் மதிப்பிலான 750 புதிய தாழ்தள குளிர்சாதன மின்சாரப் பேருந்துகள் 7 பணிமனைகள் மூலம் இயக்கிடத் திட்டமிடப்பட்டு, அதன் முதற்கட்டமாக 234 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் 130 புதிய தாழ்தள குளிர்சாதன மின்சாரப் பேருந்துகளின் சேவை இன்று தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.</p><p>தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் 756 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,614 புதிய பேருந்துகள் இயக்கிடத் திட்டமிடப்பட்டு. 6 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் முதற்கட்டமாக 55 கோடியே 58 லட்சம் ரூபாய் செலவில் 120 புதிய பேருந்துகளின் சேவை தமிழ்நாடு முதலமைச்சரால் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.</p><p>இந்நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆ.விஜய் தமிழன் பார்த்திபன், தலைமைச் செயலாளர் முனைவர் மு.சாய்குமார். போக்குவரத்துத் துறை செயலாளர் இல.நிர்மல்ராஜ். இ.ஆ.ப. சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் த.மோகன், இ.ஆ.ப மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.