தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கூட்டுறவு வங்கிகளில் ரூ.75,000 வரை பயிர்க்கடன் முழு தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

16 Jun 2026, 12:38 pm
கூட்டுறவு வங்கிகளில் ரூ.75,000 வரை பயிர்க்கடன் முழு தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
<p>கூட்டுறவு வங்கிகளில் ரூ.75,000 வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு முழு தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.</p><p>கடந்த மே 25-ஆம் தேதி, ரூ. 50,000 வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். இதையடுத்து, இக்கடன் தள்ளுபடி வரம்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனப் பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.</p><p>இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.75,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100 சதவீதம் முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும், அதற்கு மேல் பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு ரூ.35,000 வரை தள்ளுபடி செய்யப்படும் என்றும் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் இன்று அறிவித்துள்ளார்.<img src="https://v3.magazineallyapi.theekkathir.in/images/2026/06/6a00270b-fe88-43d4-829b-05828620b690.jpg" /></p><p><br></p><p>மேலும், இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் 01.05.2025 முதல் 28.02.2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள 14,43,504 விவசாயிகள் பயனடைவார்கள். இதனால் அரசுக்கு ரூ.5,932.23 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.