புதிய மின்னணு குடும்ப அட்டைகள் முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
14 Jul 2026, 1:24 am
<p><strong>புதிய மின்னணு குடும்ப அட்டைகள் முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்</strong></p><p>சென்னை, ஜூலை 13- தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் திங்களன்று (ஜூலை 13) பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ள எம்.கே.பி. நகர், சிந்தாமணி கூட்டுறவு நியாய விலைக்கடையில் தமிழ்நாடு முழுவதும் 73,000 குடும்பங்களுக்குப் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்தார். இதன் ஒருபகுதியாக பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்குப் புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், உணவு அமைச்சர் ப. வெங்கடரமணன், கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பெ. அமுதா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p>
