முந்தய பக்கம்

நீதியை நிலைநாட்டுவோம்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

14 Apr 2026, 12:48 pm
நீதியை நிலைநாட்டுவோம்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
<p>அம்பேத்கரின் பிறந்தநாளில், நீதியை நிலைநாட்டுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</p><p>சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 136ஆவது பிறந்தநாளையொட்டி, முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வேலூரில் உள்ள அம்பேத்கர் சிலைக்குக் கீழ் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:</p><p>“ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை, பெண்கள் எட்டியுள்ள முன்னேற்றத்தின் அளவினாலே நான் அளவிடுகிறேன்.” – அண்ணல் அம்பேத்கர்.</p><p>புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளில், அரசியலமைப்பைப் பாதுகாக்கவும், சமூகநீதியை நிலைநாட்டவும், ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு குரலையும் காக்கவும் நமது உறுதியை வலிமைப்படுத்துவோம்! இந்தியாவின் வலிமை நம் பன்மைத்துவம்தான்; திணிக்கப்படுகிற ஒற்றைத்தன்மை அல்ல.</p><p>முன்னேற்றமே அளவுகோல் எனில், ஒற்றைத்தன்மையையும், ஏற்றத்தாழ்வுகளையும் புறந்தள்ளி, பன்மைத்துவத்தையும் சமத்துவத்தையும் தேர்ந்தெடுப்போம்; நீதியை நிலைநாட்டுவோம்!&quot; இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p><p><br></p>
Share
FacebookXWhatsAppTelegram