சிஐடியு டாக்சி–வேன் டிரைவர்கள் சங்க பொன்விழா பேரவை
10 Feb 2026, 4:50 pm
<p><strong>சிஐடியு டாக்சி–வேன் டிரைவர்கள் சங்க பொன்விழா பேரவை</strong></p>
<p>இராஜபாளையம், பிப்.10- இராஜபாளையம் சிஐ டியு டாக்சி–வேன் டிரைவர் கள் சங்கத்தின் பொன்விழா ஆண்டு பேரவை, தொழில் வர்த்தக சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. பேரவைக்கு சங்கத் தலைவர் ஜெ.விஜயகுமார் தலைமை தாங்கினார். தங்க வேல் வரவேற்றார். சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.மகாலட்சுமி பேரவையைத் தொடங்கி வைத்தார். பேர வையில் ஆண்டு அறிக்கை யை சங்க செயலாளர் கண் ணன் வாசித்தார். வரவு–செலவு அறிக்கையை ஐயப் பன் சமர்ப்பித்தார். சிஐடியு மாவட்ட உதவி தலைவர் ஜி.கணேசன், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.திருமலை, கைத்தறி நெசவாளர் சங்க மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன், தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் முனி யாண்டி, ஏஐடியுசி ஓட்டுநர்–உரிமையாளர் சங்க தலை வர் மணிகண்டன் உள்ளிட் டோர் வாழ்த்திப் பேசினர். பேரவையில் தலைவ ராக ஜெ.விஜயகுமார், செய லாளராக கே.கண்ணன், பொருளாளராக ஜி.ஐயப் பன், துணைத் தலைவர் களாக தங்கவேல், செல் வக்கனி, துணைச் செயலா ளர்களாக செல்வம், கல்யா ணகுமார் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். சிஐடியு மாவட்டச் செய லாளர் பி.என்.தேவா நிறைவு ரையாற்றினார். பேரவையில், புதிய மோட்டார் வாகன சட்ட திருத் தங்களை ஒன்றிய மோடி அரசு கைவிட வேண்டும், 60 கிலோ மீட்டருக்குள் உள்ள டோல்கேட்டுகளை அகற்றி கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும், பெட்ரோல்–டீசல் விலை உயர்வை குறைக்க வேண் டும், 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாக னங்களுக்கு எப்.சி. பெற கூடுதலாக விதிக்கப்படும் கட்டண உயர்வை கேரளா, ஆந்திர மாநிலங்களைப் போல் திரும்பப் பெற வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.</p>
