தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரசு முடிவுக்கு வரவேற்பு ; ஊழியர் நலனில் அக்கறை தேவை சிஐடியு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் வலியுறுத்தல்

12 May 2026, 11:55 pm
அரசு முடிவுக்கு வரவேற்பு ; ஊழியர் நலனில் அக்கறை தேவை சிஐடியு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் வலியுறுத்தல்
<p><strong>அரசு முடிவுக்கு வரவேற்பு ; ஊழியர் நலனில் அக்கறை தேவை சிஐடியு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் வலியுறுத்தல்</strong></p><p>சென்னை, மே 12- தமிழகத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் 717 மதுபானக் கடைகளை மூடும் அரசின் முடிவை வரவேற்பதோடு, அங்கு பணிபுரியும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் </p><p><strong>(சிஐடியு) கோரிக்கை விடுத்துள்ளது. அவசரகதியில் தயாரிக்கப்பட்ட பட்டியல்?</strong> </p><p>இது தொடர்பாக சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் கே. திருச் செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கை யில், </p><p>வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகாமையில் உள்ள கடைகளை மூட முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளதைச் சமூகப் பொறுப்புள்ள தொழிற்சங்கம் என்ற முறையில் வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார். </p><p>அதேநேரத்தில், மூடப்பட வேண்டிய கடைகளைப் பட்டிய லிடுவதில் அதிகாரிகள் அவசர கதி காட்டியுள்ளதாகச் சுட்டிக்காட்டி யுள்ளார்.</p><p> குறிப்பாக, டாஸ்மாக் கடை களுக்கு இணையாக இயங்கி வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் ‘எப்.எல்.2’ (FL2) மனமகிழ் மன்றங்கள் இந்த ஆய்வில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.</p><p> அரசு கடையை மூடிவிட்டு, அதற்கு அருகிலேயே உள்ள தனியார் மதுக்கூடங்களைத் தொடர்ந்து இயங்க அனுமதிப்பது, அங்கு கூட்டத்தை அதிகரிக்கவே வழிவகுக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.<strong> </strong></p><p><strong>3,000 ஊழியர்களின் எதிர்காலம்</strong> </p><p>தற்போது மூடப்படவுள்ள 717 கடைகளில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தக் கடைகளை மூடும் அதே வேளையில், அங்கு பணி யாற்றும் ஊழியர்களுக்கு மாற்றுப் பணி வழங்குவது குறித்த தெளிவான அறிவிப்பு இதுவரை வெளியாக வில்லை. இது ஊழியர்களிடையே பணிப் பாதுகாப்பற்ற தன்மையையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது</p><p>எனவே, பாதிக்கப்பட்ட 3,000 ஊழியர்களுக்கும் அவர்களது கல்வித் தகுதிக்கேற்ப கூட்டுறவுத் துறை அல்லது அரசின் இதர துறைகளில் நிரந்தர மாற்றுப்பணி வழங்கிட முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.