மாற்றுத்திறனாளிகள் போராட்டத்திற்கு சிஐடியு ஆதரவு
12 Feb 2026, 4:57 pm
<p><strong>மாற்றுத்திறனாளிகள் போராட்டத்திற்கு சிஐடியு ஆதரவு</strong></p>
<p>உதவித் தொகையை 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கக்கோரி வியாழனன்று (பிப்.12) மூன்றாவது நாளாக சென்னையில் மாநில மாற்றுத்திறனாளிகள் ஆணையரகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது மறியலில் ஈடுபட்ரோரை காவல் துறையினர் கைது செய்து ராஜரத்தினம் மைதானத்தில் வைத்தனர். இந்த போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்து சிஐடியு மாநிலத் தலைவர் ஜி.சுகுமார் பேசினார். சிஐடியு மத்தியசென்னை மாவட்டத் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம், செயலாளர் எஸ்.கே.முருகேஷ் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.</p>
