தொழிலாளர்கள் உரிமை நாளில் சிஐடியு ஆர்ப்பாட்டம்.
14 Dec 2025, 3:45 pm
<p><strong>தொழிலாளர்கள் உரிமை நாளில் சிஐடியு ஆர்ப்பாட்டம்.</strong></p>
<p>தொழிலாளர்களை பாதிக்கும் முதலாளிகளுக்கு ஆதரவான 4 தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற வேண்டும், ஆலைகளில் இரவு நேர பணிகளில் பெண்களை ஈடுபடுத்துவதை தடுக்க வேண்டும், ஆபத்தான தொழில்களில் மனிதர்களை ஈடுபடுத்துவதை நிறுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பெரியபாளையத்தில் தொழிலாளர் உரிமை நாளான ஞாயிறன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் கே.விஜயன், மாவட்டச் செயலாளர் ஏ.ஜி.சந்தானம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</p>
