சிஐடியு தலைவர்கள் கைது : ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்
28 Nov 2025, 2:28 pm
<p><strong>சிஐடியு தலைவர்கள் கைது : ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>திருவாரூரில் கைது செய்யப்பட்ட சிஐடியு தலைவர்களை விடுதலை செய்யக்கோரி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, திருவண்ணாமலை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநகரத் தலைவர் டி. யுவராஜ் தலைமை தாங்கினார். சிஐடியு ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் கே. காங்கேயன், ஆட்டோ சங்க மாவட்ட பொதுச் செயலாளர் கே. சரவணன், சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஆர். பாரி, தையல் சங்க மாவட்ட செயலாளர் எம். வீரபத்திரன், மின் ஊழயர் மத்திய அமைப்பின் செயலாளர் எம். பாலாஜி, அரசு போக்குவரத்து கழக சங்க மண்டல தலைவர் எ. சேகரன், கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் ஆர். கமலக்கண்ணன், டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் செல்வகுமார், சிபிஎம் மாநகர செயலாளர் எம் .பிரகலநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாநகர செயலாளர் என். பிரம்மா நன்றி கூறினார்.</p>
