சீனாவில் பயங்கர நிலச்சரிவு: மீட்பு பணி மேற்கொள்வதில் சிரமம்
17 Jul 2026, 4:57 pm
<p>சீனாவின் தென்மேற்கு மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால், அங்கு வசித்து வந்த ஆயிரணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.</p><p>சீனாவின் பெங்சுய் மாகாணத்தில் உள்ள சோங்கிங் நகரத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலச்சரிவால் 10க்கும் அதிகமான அடுக்குமாடி கட்டிடங்கள் மண்ணுக்குள் புதைந்துள்ளன.</p><p>இதனைத்தொடர்ந்து, அங்கு மீட்புப் படையினர் களமிறங்கி பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து 1000க்கும் மேற்பட்டோரை வெளியேற்றியுள்ளனர். </p><p><img src="https://v3.magazineallyapi.theekkathir.in/images/2026/07/d621821f-c87e-4b85-b5e4-f9fee6db0a89.jpg" /></p><p>இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி மாயமானவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை இடிபாடுகளுக்குள் இருந்து 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இருப்பினும் ஏராளமானோர் இடுபாடுகளுக்குள் சிக்கியிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.</p><p><img src="https://v3.magazineallyapi.theekkathir.in/images/2026/07/0b3fa7ad-304a-4e7d-830a-364c072d36a7.jpg" /></p><p>தொடர்ந்து பெய்து வந்த கனமழையால், வூஜியாங் ஆற்றின் அருகிலுள்ள மலைப்பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சமநிலை அற்ற மலைப்பகுதியில் இருந்த கட்டிடங்கள் பலத்த சேதமடைந்துள்ளதால் அங்கு மீட்புப் பணிகள் மேற்கொள்வது மேலும் கடினமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
