முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

16 Mar 2026, 4:46 pm
 தீக்கதிர் முக்கிய செய்திகள்
<p><strong>எழுத்தாளர் தமிழ்ச்செல்வனுக்கு முதலமைச்சர் வாழ்த்து</strong> &nbsp;</p> <p>சென்னை: தான் எழுதும் நிலப்பரப்பின் கருப்பொருட்களை எல்லாம் கதையின் ஓட்டத்தில் இயல்பாகப் பின்னிப் பிணைக்கும் &nbsp;எழுத்தாளர் &lsquo;தோழர்&rsquo; ச.தமிழ்ச்செல்வன் அவர் களுக்கு&zwnj; சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப் பட்டிருப்பதற்கு எனது பாராட்டுகள்! தாமதப்படுத் தினாலும், இறுதியில் சரியான கைகளில் சாகித்ய அகாடமி சேர இருப்பதில் மகிழ்ச்சி &nbsp;கொள்கிறேன். தங்களது படைப்புகள் மேலும் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு, நம் மண்ணின் கதைகள் அனைவரையும் சென்று சேர வாழ்த்துகிறேன்!</p> <p><strong>புதுச்சேரியில் வேட்புமனுத் &nbsp;தாக்கல் தொடங்கியது</strong></p> <p>புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்ற பேர வைக்கு ஏப்ரல் 9 ஆம் தேதி தேர்தல் நடைபெ றும் என தலைமை தேர்தல் ஆணையர் அறி வித்த நிலையில், வேட்புமனுத் தாக்கல் திங்களன்று தொடங்கியது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள &nbsp;30 சட்டமன்றத் தொகுதிகளில் புதுச்சேரியில் 23, காரைக்கால் மாவட்டத்தில் 5, மாகி மற்றும் &nbsp;யானம் பகுதிகளில் தலா 1 தொகுதி என்று &nbsp;அமைந்துள்ளன. இந்த 30 தொகுதிகளுக்கும் &nbsp;17 இடங்களில் அலுவலகம் அமைக்கப்பட்டு வேட்புமனுக்கள் பெறப்படுகின்றன. பிரதான அரசியல் கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீட்டை &nbsp;இன்னும் முடிவு செய்யாத காரணத்தால் முதல் &nbsp;நாளான திங்களன்று யாரும் மனுத் தாக்கல் &nbsp;செய்யவில்லை. &nbsp;</p> <p><strong>இன்று முதல் திமுக &nbsp;வேட்பாளர்கள் நேர்காணல்</strong></p> <p>சென்னை: சென்னை அண்ணா அறிவா லயத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பொதுத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட &nbsp;விருப்ப மனு அளித்தோருக்கான நேர்கா ணல் மார்ச் 17 ஆம் தேதி (செவ்வாய்) தொடங்கு கிறது. மாவட்ட வாரியாக நடைபெறும் இந்த &nbsp;நேர்காணல் மார்ச் 22 மாலை வரை தொடரும் &nbsp;என திமுக தலைமை அறிவித்துள்ளது. நேர்காணல் காலை 9 மணி மற்றும் மாலை &nbsp;4 மணி என இரு கட்டங்களாக நடைபெறு கிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram