முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
17 Jun 2026, 12:13 am
<p><strong>முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு</strong></p><p>சிதம்பரம், ஜூன் 16- சிதம்பரம் வீனஸ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளித் தாளாளர் எஸ்.குமார் தலைமை வகிக்க, முதல்வர் லியோ பெஸ்கி ராவ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் முதியோர்களை அன்புடனும், கனிவுடனும் நடத்த வேண்டியதன் அவசியத்தை முதல்வர் வலியுறுத்தினார். தொடர்ந்து, ஆசிரியை சௌமியா வாசித்த உறுதிமொழியை மாண வர்கள் பின்தொடர்ந்து ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சி மாணவர்களிடையே முதி யோர்களை மதிக்கும் பண்பை வளர்க்கும் வகையில் அமைந்தது.</p>
