சிதம்பரம் நடராஜர் கோவிலில் சட்டவிரோத வசூல் வேட்டை பக்தர்கள் அமரும் இடத்தில் தீட்சிதர்களின் அநாகரிகம்
20 May 2026, 10:25 pm
<p></p><p><strong>சிதம்பரம் நடராஜர் கோவிலில் சட்டவிரோத வசூல் வேட்டை பக்தர்கள் அமரும் இடத்தில் தீட்சிதர்களின் அநாகரிகம்</strong></p><p>சிதம்பரம், மே 20- சிதம்பரம் நடராஜர் கோவிலில் பக்தர்கள் அமரும் இடங்களில் அநாக ரிகமான செயல்கள் அரங் கேறுவதாகவும், சட்டவிரோ தப் பண வசூல் நடைபெறு வதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்துள் ளன. </p><p>இதுகுறித்து தெய்வீக பக்தர்கள் பேரவையின் தலைவர் ஜெமினி ராதா, தமிழக முதலமைச்சருக்குப் புகார் மனு ஒன்றை அனுப் பியுள்ளார். </p><p>அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குத் தமிழகம் மட்டுமன்றி, வெளிமாநிலங் களில் இருந்தும் நாள்தோ றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்ற னர். </p><p>குறிப்பாக, கோவிலில் உள்ள கனகசபையின் மீது ஏறி, சுவாமிக்கு மிக அருகில் நின்று தரிசனம் செய்யப் பக்தர்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.</p><p> இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கனகசபைக்கு முன்பாக வரி சையாக உள்ள தூண்களின் இடுக்குகளில் பக்தர்கள் யாரும் அமரக் கூடாது என்ப தற்காகத் தீட்சிதர்கள் அங் கெல்லாம் எண்ணெய்யை ஊற்றியுள்ளனர். </p><p>இதற்குப் பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். </p><p>தங்க ளுக்கு இணையாகப் பொது மக்களும் அந்த இடத்தில் அமர்கிறார்களே என்ற தீய எண்ணத்துடனும், சாதிய வன்மத்துடனும் தீட்சிதர்கள் எண்ணெய் ஊற்றிப் பக்தர் களை அவமரியாதை செய்து ள்ளனர். </p><p>மேலும், கனகசபை மீது ஏறி நடராஜரைத் தரிசனம் செய்வதற்காகப் பக்தர்க ளின் வசதியைப் பொறுத்து, ஒரு நபருக்கு 200 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை தீட்சிதர்கள் சட்ட விரோதமாகப் பணம் வசூ லித்து வருகின்றனர்.</p><p> பாரம் பரியமாகக் கனகசபையில் பொதுமக்கள் அனைவரும் இலவசமாகவே தரிசனம் செய்து வந்துள்ளனர். </p><p>கனகசபையில் தரிசனம் செய்யப் பக்தர்களிடம் கட்டா யப் பணம் வசூல் செய்யக் கூடாது என்று நீதிமன்ற உத்தரவு நடைமுறையில் உள்ளது. இந்த நீதிமன்ற உத்தரவையும் மீறித் தீட்சிதர்கள் தன்னிச்சையாக வசூலில் ஈடுபட்டு வருகின்ற னர். </p><p>இதன் மூலம் நாளொன் றுக்கு லட்சக்கணக்கான ரூபாயைப் பக்தர்களிடம் இருந்து தீட்சிதர்கள் கொள்ளையடிக்கின்றனர். </p><p>இந்தப் பணத்திற்கு அவர்கள் எவ்விதக் கணக்கும் காட்டு வது இல்லை. எனவே, தமிழக அரசும் இந்து சமய அறநிலையத் துறையும் இந்த விவகாரத் தில் உடனடியாகத் தலை யிட்டுப் பக்தர்களின் உரிமை களைப் பாதுகாக்க வேண்டும்.</p><p> மேலும், சட்ட விரோதமாக வசூலிக்கப் படும் தொகையைத் தடுத்து நிறுத்தவும், தீட்சிதர்களின் இந்த வசூல் வேட்டையைக் கண்காணிக்கவும் அறநிலை யத்துறை சார்பில் தனி அதி காரியை நியமித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தியுள் ளார்.</p>
