தொலைநோக்கியில் சூரியனை பார்வையிடும் மாணவர்கள்
1 hour before
<p><strong>தொலைநோக்கியில் சூரியனை பார்வையிடும் மாணவர்கள்</strong></p><p>நிலவின் மேற்பரப்பில் ‘சந்திரயான்-3’ வெற்றிகரமாகத் தரையிறங்கியதைக் கொண்டாடும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் ஆக. 23ல் தேசிய விண்வெளி தினம் கடைபிடிக்கப்படுகிறது. தேசிய விண்வெளி தினத்தினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் கட்ட வளாகத்தில் சென்னை பள்ளி மாணவர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் மேங்கோ எஜுகேஷன் நிறுவனத்தின் தொழில்முறை தொலைநோக்கிகள் மூலம் சூரியனைப் பார்வையிடும் நிகழ்ச்சி திங்களன்று (ஆக.24) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இணை ஆணையாளர் க.கற்பகம்,மாநகராட்சி அலுவலர்கள், மேங்கோ எஜுகேஷன் நிறுவனத்தின் நிர்வாகிகள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.</p>
