மறுசீரமைக்கப்பட்ட பூங்கா புறநகர் ரயில் நிலையம் இன்று திறப்பு
16 Jul 2026, 11:43 pm
<p><strong>மறுசீரமைக்கப்பட்ட பூங்கா புறநகர் ரயில் நிலையம் இன்று திறப்பு</strong> </p><p>சென்னை, ஜூலை 16- ‘அம்ரித் ரயில் நிலையம்’ திட்டத்தின் கீழ் ரூ.14.79 கோடி செலவில் மறுசீரமைக் கப்பட்ட சென்னை பூங்கா புறநகர் ரயில் நிலையத்தை, பிரதமர் மோடி ஜூலை 17 அன்று காணொலி காட்சி வாயிலாகத் திறந்து வைக்கி றார். 1931-ல் தொடங்கப்பட்ட இந்த நிலையம், தினமும் 29,000 பயணிகளைக் கையாள்வதுடன் சென்ட்ரல், புறநகர், எம்.ஆர்.டி.எஸ் மற்றும் மெட்ரோ சேவை களை இணைக்கும் முக்கிய மையமாக விளங்குகிறது. புதிய கட்டமைப்பு, நவீன வசதிகள், மின்தூக்கிகள் மற்றும் மாற்றுத்திறனாளி களுக்கு ஏற்ற தடையற்ற நடைபாதைகளுடன் இந்த நிலையம் மேம்படுத்தப் பட்டுள்ளது. இது முதியவர் கள் மற்றும் அருகிலுள்ள அரசு பொது மருத்துவ மனைக்குச் செல்லும் நோயா ளிகளுக்குப் பெரிதும் பயன ளிக்கும்.</p>
