தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புடவை, துப்பட்டா கதவில் சிக்கினால் ரயிலை நிறுத்தும் புதிய தொழில்நுட்பம் சென்னை மெட்ரோவில் தொடக்கம்!

17 May 2026, 2:06 am
புடவை, துப்பட்டா கதவில் சிக்கினால்  ரயிலை நிறுத்தும் புதிய தொழில்நுட்பம்  சென்னை மெட்ரோவில் தொடக்கம்!
<p><strong>புடவை, துப்பட்டா கதவில் சிக்கினால் ரயிலை நிறுத்தும் புதிய தொழில்நுட்பம் சென்னை மெட்ரோவில் தொடக்கம்!</strong></p><p>சென்னை, மே 16 சென்னை மெட்ரோ ரயில் பயணி களின் பாதுகாப்பை அடுத்த கட்டத் திற்கு எடுத்துச் செல்லும் வகையில், கதவுகளில் ஆடைகள் சிக்கி இழுத்துச் செல்லப்படுவதைத் தடுக்கும் “இழு படுதலைத் தடுக்கும் வசதி” (Anti-Drag Feature) என்ற புதிய தொழில்நுட்பம் சனிக்கிழமை (மே 16) தொடங்கி வைக்கப்பட்டது. </p><p>சென்னை மெட்ரோ ரயில் நிறு வனத்தின் இயக்குநர் மனோஜ் கோயல் இந்த அதிநவீன வசதி கொண்ட முதல் மெட்ரோ இரயிலைக் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். </p><p>இது எப்படிச் செயல்படுகிறது? பொதுவாக மெட்ரோ ரயில் கதவு கள் மூடும்போது கை, பை போன்ற பெரிய பொருட்கள் சிக்கினால் கதவு கள் தானாகத் திறக்கும் தொழில்நுட்பம் ஏற்கெனவே உள்ளது. </p><p>ஆனால், தற்போது இந்தியச் சூழலுக்கு ஏற்ப பிரத்யேகமாக இந்த புதிய “இழுபடு தலைத் தடுக்கும் வசதி” சேர்க்கப் பட்டுள்ளது.</p><p> இதன் மூலம், பெண்களின் புடவை முந்தானை, துப்பட்டா (ஷால்) அல்லது பைகளின் மெல்லிய பட்டைகள் போன்ற பொருட்கள் எதிர்பாராத விதமாக கதவுகளுக்கு இடையே சிக்கி இழுக்கப்பட்டால், இந்தத் தொழில் நுட்பம் அதை உடனே கண்டுபிடித்து விடும். </p><p>உடனே ரயிலின் பிரேக்குகள் தானாகவே செயல்பட்டு ரயில் உடனடியாக நிறுத்தப்படும். </p><p>பின்னர், சிக்கிய பொருளை எடுப்பதற்காக அந்த குறிப்பிட்ட கதவு மட்டும் திறக்க ப்பட்டு, பொருள் எடுக்கப்பட்ட பின் இரயில் மீண்டும் பாதுகாப்பாகப் புறப்படும். </p><p>உலகிலேயே முதல் முறை! இந்திய மெட்ரோ வரலாற்றிலேயே இந்த வசதி அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். </p><p>அது மட்டுமல்லாமல், சமீபத்திய சர்வ தேச விதிகளின்படி (EN 14752:2025) உலகிலேயே முதல் முறையாக இந்தத் தொழில்நுட்பம் சென்னை மெட்ரோ வில் தான் பயன்படுத்தப்பட் டுள்ளதாகக் கருதப்படுகிறது. </p><p>அடுத்தடுத்த ரயில்களில்... தற்போது ஒரு ரயிலில் இந்த வசதி தொடங்கப்பட்டுள்ள நிலையில், கட்டம்-1 இல் இயக்கப்பட்டு வரும் மீதமுள்ள 51 மெட்ரோ ரயில்களிலும் இந்த இழுபடுதலைத் தடுக்கும் வசதி யைப் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. </p><p>அனைவருக்கும், குறிப்பாகப் பெண் பயணிகளுக்குப் பாதுகாப்பான பயணச் சூழலை உருவாக்கச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எப்போதும் உறுதியாக உள்ளது என்ப தற்கு இந்த முயற்சி ஒரு சான்றாகும். </p><p>இந்தத் தொடக்க விழாவில் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அதிகாரி கள் மற்றும் ஆலோசகர்கள் பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.