தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நுரையீரலில் சிக்கிய திருகாணியை அகற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவர்கள் சாதனை

14 May 2026, 9:13 pm
நுரையீரலில் சிக்கிய திருகாணியை அகற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவர்கள் சாதனை
<p><strong>நுரையீரலில் சிக்கிய திருகாணியை அகற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவர்கள் சாதனை</strong></p><p>செங்கல்பட்டு, மே 14- செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஓராண்டு நிரம்பிய பெண் குழந்தையின் நுரையீரலில் சிக்கியிருந்த சிறிய இரும்புத் திருகாணியை இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மருத்துவர்கள் வெற்றிகர மாக அகற்றி சாதனை படைத்துள்ள னர். </p><p>நவீன மருத்துவத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சையின்றி இக்கருவி அகற்றப்பட்டதால், அக்குழந்தை தற்போது முழு ஆரோக்கியத்துடன் நலம்பெற்றுள்ளது. </p><p>செங்கல்பட்டு காமராஜர் நகரைச் சேர்ந்த ஒரு வயது பெண் குழந்தைக்குத் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து, பெற்றோர்கள் உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். </p><p>குழந்தையைப்பரிசோதித்த மருத்துவமனை டீன் பிரியா பசுபதி மற்றும் மருத்துவக் குழுவினர், குழந்தையின் வலது பக்க நுரையீரலில் சிறிய திருகாணி ஒன்று சிக்கியிருப்பதைக் கண்டறிந்தனர். </p><p>இதைத் தொடர்ந்து, குழந்தை நலப் பிரிவின் இணைப் பேராசிரியர் சரத் பாலாஜி தலைமையிலான மருத்து வக் குழுவினர், தீவிர சிகிச்சையை மேற்கொண்டனர். </p><p>மிகவும் சவாலான இந்தச் சூழலில், குழந்தைக்குத் தழும்பு ஏற்படாத வகையில் &#39;மினிமலி இன்வேசிவ்&#39; எனும் நுண்துளை முறையையும், &#39;பிளெக்சிபிள் பிராங்கோஸ்கோப்&#39; கருவியையும் பயன்படுத்தி, இடுக்கிகள் மூலம் சுமார் இரண்டு மணி நேரம் போராடி அந்தத் திருகாணியை பத்திரமாக வெளியே எடுத்தனர். </p><p>இந்தச் சிகிச்சைக்குப் பின் குழந்தையின் சுவாசம் சீரடைந்து, தற்போது அவர் முழுமையாகக் குணமடைந்துள்ளார். </p><p>உயிர்காக்கும் சிகிச்சையைச் சரியான நேரத்தில் வழங்கிய மருத்து வர்களைச் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் நேரில் சந்தித்துப் பாராட்டு தெரி வித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.