கலசலிங்கம் செவிலியர் கல்லூரியில் விழா
21 Nov 2025, 2:51 pm
<p><strong>கலசலிங்கம் செவிலியர் கல்லூரியில் விழா</strong></p>
<p>திருவில்லிபுத்தூர், நவ.21– விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் வளாகத்தில், கலசலிங்கம் செவிலியர் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களின் “பிளோரன்ஸ் நைட்டிங்கேல் தீபம் ஏற்றும் விழா” செவ்வாயன்று நடை பெற்றது. கலசலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் கே.ஸ்ரீதரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எஸ்.சசி ஆனந்த் துவக்க உரை யாற்றினார். துணை வேந்தர் எஸ்.நாராயணன், பதிவாளர் வி.வாசுதேவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அறுவைச் சிகிச்சை நிபுணர் எஸ்.சுரேஷ்குமார், கல சலிங்கம் மருத்துவமனை இயக்குநர் ஜேம்ஸ் பாண்டி யன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக, கல்லூரி முதல்வர் ஆர்.பிரிசில்லா இன்ப பாரதி வரவேற்றார். பேரா. நாகமுத்து விளக்க உரையாற்றினார். பேரா.வி.கலா நன்றி கூறினார். </p>
