புகழ்பெற்ற ஓவியரின் பிறந்தநாள் நிஃப்ட் டீ கல்லூரியில் கொண்டாட்டம்
30 Mar 2026, 3:40 pm
<p><strong>புகழ்பெற்ற ஓவியரின் பிறந்தநாள் நிஃப்ட் டீ கல்லூரியில் கொண்டாட்டம்</strong></p>
<p>திருப்பூர், மார்ச் 30 - திருப்பூர் சிட்கோவில் செயல்பட்டு வரும் நிஃப்ட்- டீ ஆடை வடிவமைப் புக் கல்லூரியில் புகழ்பெற்ற ஓவியர் வின்சென்ட் வான் கோக்கின் 167ஆவது பிறந்தநாள் விழா வண்ணமயமாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வை முன்னிட்டு, ஃபாஷன் டிசைன் மற்றும் காஸ்ட்யூம் டிசைன் துறைகளைச் சேர்ந்த மாண வர்கள், அந்த மாபெரும் கலைஞருக்கு மரியாதை செலுத்தும் விதமாக சிறப் பான ஓவிய முயற்சியில் ஈடுபட்டனர். வான் கோக் தனது குறுகிய வாழ் நாளான 37 ஆண்டுகளில் (30 மார்ச் 1853 – 29 ஜூலை 1890) சுமார் 900 ஓவியங்களை யும், 1,100க்கும் மேற்பட்ட வரைபடங்க ளையும் உருவாக்கியுள்ளார். அவரது கலை மரபு இன்று வரை பல தலைமு றைகளுக்கு பேராதரவும் ஊக்கமும் அளித்து வருகிறது. அவரது புகழ்பெற்ற படைப்பான “தி ஸ்டாரி நைட்” இலி ருந்து ஈர்க்கப்பட்டு, மாணவர்கள் கலை மற்றும் ஃபாஷனை இணைத்து, எதிர் கால ஃபாஷன் ஷோ கருப்பொருளை உருவாக்கினர். இதில் சூரியன், எட்டு கிரகங்கள், 148 நிலாக்கள், விண்மீன் கள், விண்கற்கள் உள்ளிட்ட சூரியக் குடும்பத்தின் அம்சங்கள் கலைநயத்து டன் இணைக்கப்பட்டன. இந்த சிருஷ்டியில், மாணவர்கள் காலத்தையும், விண்வெளியையும் தாண்டிய கற்பனை உலகை உருவாக்கி னர். இதில் வின்சென்ட் வான் கோக் க்ரியேட்டிவ் டைரக்டராகவும், லியோ னார்டோ டா வின்சி நடன அமைப்பாளரா கவும், பாப்லோ பிக்காசோ ஸ்டைலிஸ் டாகவும், செண்டயா முன்னணி மாடலா கவும் கற்பனை செய்யப்பட்டனர். மாண வர்களும் மாடல்களாக கலந்து கொண்டு, இந்த கற்பனைக்கு உயிரூட்டி னர். கல்லூரியின் மேல்தளம் முழுவதும் “ஸ்டாரி நைட்” காட்சியகமாக மாற்றப் பட்டு, இந்த கலைஞர்கள் அனைவரும் விண்வெளி கருப்பொருளில் கற்பனை கதாபாத்திரங்களாக வரையப்பட்டனர். கலை, ஃபாஷன் மற்றும் கற்பனை இணைந்த இந்த முயற்சி பார்வையாளர் களை கவர்ந்தது. இந்த பெரிய அளவிலான ஓவி யத்தை ஆடை வடிவமைப்பு துறை யின் தேவந்திரன் தலைமையில், விஷ்ணு வர்தன், சுதர்ஷன், சௌந்தர், கவுதம் மற்றும் நவநீதன் ஆகியோர் இணைந்து சிறப்பாக நிறைவேற்றினர். மாணவர்கள் பத்து நாட்கள் தொடர்ந்து உழைத்து, அக்ரிலிக் வண் ணங்களை பயன்படுத்தி இந்த பிர மாண்ட ஓவியத்தை உருவாக்கினர். வான் கோக்கின் மேதைமையை மட்டு மின்றி, இளம் கலைஞர்களின் எல்லை யற்ற படைப்பாற்றலையும் வெளிப்ப டுத்தும் சிறந்த நிகழ்வாக இது அமைந் தது.</p>
