தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாணவர்களின் கவலைகளை நிராகரித்த மோடி அரசு விடைத்தாள் சரிபார்ப்பு கட்டணத்தை குறைத்து திசை திருப்பல்

17 May 2026, 9:46 pm
மாணவர்களின் கவலைகளை நிராகரித்த மோடி அரசு விடைத்தாள் சரிபார்ப்பு கட்டணத்தை குறைத்து திசை திருப்பல்
<p><strong>மாணவர்களின் கவலைகளை நிராகரித்த மோடி அரசு விடைத்தாள் சரிபார்ப்பு கட்டணத்தை குறைத்து திசை திருப்பல்</strong></p><p>​​​​​​​புதுதில்லி சிபிஎஸ்இ (மத்திய இடை நிலை கல்வி வாரியம்) 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த மே 13 அன்று பிற்பகல் 1:40 மணிக்கு வெளியிட்டது. இந்த ஆண்டு சுமார் 18.5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வெ ழுதினர். </p><p>ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 3.19 சதவீதம் குறைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. </p><p>விடைத்தாள்களைத் திருத்த ‘ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்’ முறை யை சிபிஎஸ்இ அறிமுகப்படுத்தி யது. இது டிஜிட்டல் முறையில் மதிப்பீடு செய்யும் திரைவழி மதிப் பெண் வழங்கும் முறை ஆகும். </p><p>ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் முறை யால் தான் தேர்ச்சி, மதிப்பெண் குறைந்துள்ளதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில், மாணவர் களின் கவலைகளை மோடி அரசு நிராகரித்துள்ளது. </p><p>இதுதொடர்பாக ஒன்றிய அரசின் பள்ளி கல்வித் துறை செயலாளர் சஞ்சய் குமார் ஞாயிறன்று செய்தியாளர் சந்திப் பின் போது கூறுகையில், “சமீ பத்தில் சிபிஎஸ்இ வெளியிட்ட 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள், இந்த முறை ‘ஆன்-ஸ்கிரீன் மார்க் சிங்’ முறையைப் பயன்படுத்தி திருத்தப்பட்டன. இதற்கு மாண வர்கள் தரப்பில் சில கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன. </p><p>குறிப்பாக, ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ள தாக மாணவர்கள் கருதுகின்றனர். உண்மையில், கடந்த ஆண்டு டன் ஒப்பிடுகையில் தேர்ச்சி சத வீதம் 3 விழுக்காடு குறைந்து, 88%- லிருந்து 85%-ஆக வீழ்ச்சியடைந் துள்ளது. த</p><p>ங்களுக்குக் கிடைத்த மதிப்பெண்களை விட கூடுதல் மதிப்பெண்கள் கிடைத்திருக்க வேண்டும் என்று சில மாணவர்கள் கருதுகின்றனர். ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் என்பது ஒரு புதிய கருத் தாக்கமோ அல்லது இது முதல் முறையாக நடைமுறைப்படுத்தப் படும் ஒன்றோ அல்ல. </p><p>சிபிஎஸ்இ முதன்முதலில் 2014ஆம் ஆண்டிலேயே ஒஎஸ்எம் முறையைத் தொடங்கியது. </p><p>இருப்பினும், அக்காலத்தில் இருந்த தொழில்நுட்ப உள்கட்ட மைப்பு குறைபாடுகள் காரண மாக, அந்த செயல்முறையை உட னடியாகத் தொடர இயலவில்லை. இந்த ஆண்டு அதை நாங்கள் வெற்றிகரமாக மீண்டும் அறி முகப்படுத்தியுள்ளோம். </p><p>அதனால் மாணவர்களின் கவலைகளை நிரா கரிக்கிறோம். </p><p>மாணவர்கள் தங்களது விடைத்தாள்களைப் பார்க்க விரும்பினால், இந்த முறை ரூ.700-க்கு பதிலாக ரூ.100 கட்டணம் செலு த்தினால் போதும் என சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. விடைத்தா ளைச் சரிபார்க்க அல்லது சரி பார்க்கக் கோர, அதற்கும் ரூ.500-க்கு பதிலாக ரூ.100 மட்டுமே கட்ட ணமாகும்.</p><p> ஏதேனும் ஒரு குறிப் பிட்ட கேள்விக்கு மட்டும் மறு மதிப்பீடு செய்ய விரும்பினால், ஒரு கேள்விக்கு ரூ.25 கட்டணமாக இருக்கும்” என அவர் கூறினார். </p><p>ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் முறை யால் தான் தேர்ச்சி, மதிப்பெண் குறைந்துள்ளதாக மாணவர்கள் குற்றம்சாட்டை திசைதிருப்ப விடைத்தாளைச் சரிபார்ப்பு கட்ட ணத்தை குறைத்து திசை திருப்பல் வேலையை தொடங்கியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.