தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாணவர்களுக்கு தவறான விடைத்தாள்கள் வழங்கப்பட்டதை ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ

26 May 2026, 9:09 pm
மாணவர்களுக்கு தவறான விடைத்தாள்கள் வழங்கப்பட்டதை ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ
<p><strong>மாணவர்களுக்கு தவறான விடைத்தாள்கள் வழங்கப்பட்டதை ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ</strong></p><p>​​​​​​​புதுதில்லி ஆன்லைன் மூலம் விடைத்தாள் திருத்தியது; தேர்ச்சி விகிதம் குறைந்தது; மறுமதிப்பீட்டு குளறுபடி என பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு இடையே மாணவர்களுக்கு தவறான விடைத் தாள்கள் தவறாக மாற்றப்பட்ட நிகழ்வும் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வில் நிகழ்ந்துள்ளது. </p><p> 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய வேதாந்த் என்ற மாணவர் தனது டுவிட்டர் எக்ஸ் தளத்தில்,“சிபிஎஸ்இ எனக்கு அளித்த இயற்பியல் விடைத்தாளின் நகல் வேறொரு மாணவருக்குரியது. </p><p>இதைக்கண்டு தான் நிலைகுலைந்து போனேன்” எனக் கூறி, விடைத்தாள்களை பகிர்ந்துள்ளார். </p><p>வேதாந்த்தின் பதிவை சேர் செய்து, நாடு முழுவதும் மாணவர்கள், பெற்றோர்கள் என அனைத்து தரப்பினரும் சிபிஎஸ்இ-க்கு எதிராக குரல் எழுப்பினர். </p><p>இதனால் பதற்ற மடைந்த சிபிஎஸ்இ இயற்பியல் தாளில் ஏற்பட்ட குளறுபடியை ஒப்புக்கொண்டதுடன், வேதியியல் விடைத்தாள் தொடர்பான தனிப்பட்ட புகார் (மற்றொரு சம்பவம்) ஒன்றையும் ஏற்றுக்கொண்டது. </p><p>இதுதொடர்பாக சிபிஎஸ்இ இணைச் செயலாளர் (ஒருங்கிணைப்பு) வேதாந்திற்கு கடிதம் எழுதி, அவருடைய சரியான இயற்பி யல் விடைத்தாளை இணைத்து, அதற்கேற்ப அவரது தேர்வு முடிவு திருத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தினார்.</p><p> இதனை தொடர்ந்து திங்களன்று இரவு, வேதாந்த் சிபிஎஸ்இ-க்கு நன்றி தெரிவித்து சரியான விடைத்தாளின் ஸ்கிரீன்ஷாட்டுகளைப் பகிர்ந்து கொண்டார். </p><p>இருப்பினும், சரியான பதில்களுக்கும் மதிப் பெண்கள் குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அதை உன்னிப்பாகப் பரிசோதித்த பிறகு மீண்டும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கப் போவதாகவும் கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.