தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிபிஐ தேர்தல் அறிக்கை வெளியீடு

31 Mar 2026, 4:50 pm
சிபிஐ தேர்தல் அறிக்கை வெளியீடு
<p><strong>சிபிஐ தேர்தல் அறிக்கை வெளியீடு&nbsp;</strong></p> <p><strong>தமிழக முன்னேற்றத்திற்கான 302 அம்ச செயல் திட்டம்</strong></p> <p>சென்னை, மார்ச் 31- தமிழகத்தின் முன்னேற்றத்திற் காக 302 அம்சங்கள் கொண்ட தேர்தல் &nbsp;அறிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் &nbsp;கட்சி (சிபிஐ) வெளியிட்டுள்ளது. சென்னையில் உள்ள கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் செவ்வாயன்று நடைபெற்ற நிகழ்வில், மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தேர்தல் &nbsp;அறிக்கையை வெளியிட்டார். அதன் &nbsp;முதல் பிரதியை மாநிலத் துணைச் செயலாளர் நா.பெரியசாமி பெற்றுக் &nbsp;கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் மு.வீரபாண்டியன் கூறியதாவது: மத்தியில் ஆளும் பாஜக அரசு, ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதலில் மக்க ளைப் பிளவுபடுத்தும் மதவெறி அரசியலை முன்னெடுத்து வருகிறது. ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் சிறு, குறு தொழில்கள் அழிக்கப்பட்டுவிட்டன. &nbsp;பொதுத் துறை நிறுவனங்களைக் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்ப்பதே இந்த அரசின் வாடிக்கை யாக உள்ளது. தேசியக் கல்விக் &nbsp;கொள்கை மற்றும் நீட் தேர்வு &nbsp;மூலம் கல்வியை வணிகமயமாக்கு வதையும், இந்தி-சமஸ்கிருதத் திணிப் பையும் சிபிஐ கடுமையாக எதிர்க்கிறது. மாநில உரிமைகள் மீட்பு தமிழகத்தின் சமூக அமைதியைச் &nbsp;சீர்குலைக்க பாஜக முயற்சிக்கிறது. மாநிலத்திற்கு வழங்க வேண்டிய வரிப் பங்கு மற்றும் பேரிடர் நிவா ரணத் தொகையை வழங்க மறுப்ப தோடு, ஆளுநரைப் பயன்படுத்தி சட்டமன்ற நடவடிக்கைகளை முடக்கி &nbsp;&lsquo;போட்டி அரசு&rsquo; நடத்தி வருகிறது. தமி ழகத்தைப் பாதுகாக்க &lsquo;மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி&rsquo; மட்டுமே சரியான தேர்வாகும். அதிமுக இப் போது பாஜகவின் ஆர்எஸ்எஸ் ஜோதியோடு ஐக்கியமாகிவிட்டது. முக்கிய வாக்குறுதிகள் * ஊரக வேலை உறுதித் திட்டத்தை &nbsp;மேம்படுத்தி, ஆண்டுக்கு 200 நாட்கள் &nbsp;வேலையும், ரூ.700 தினசரி ஊதிய மும் வழங்கப் போராடுவோம். * லோக் ஆயுக்தா சட்டத்தைச் சீர மைத்தல், உபா (UAPA) போன்ற கொடூரச் சட்டங்களை நீக்க வலியு றுத்துதல் மற்றும் சிஏஏ சட்டத்தைத் தமிழகத்தில் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். * விகிதாச்சாரப் பிரதிநிதித்து வம் உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்கள், &nbsp;மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக &nbsp;உரிமைகளை நிலைநாட்டப் பாடுபடு வோம். * மீனவர், நெசவாளர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர் மற்றும் &nbsp;மூத்த குடிமக்களின் வாழ்வாதா ரத்தை மேம்படுத்தத் தனித்துவமான திட்டங்கள் வலியுறுத்தப்படும். * கல்வி மற்றும் மருத்துவ வசதி களை விரிவாக்குதல், &lsquo;நடந்தாய் &nbsp;வாழி காவேரி&rsquo; திட்டத்தைச் செயல் படுத்துதல் மற்றும் பட்டாசுத் தொழி லைப் பாதுகாத்தல் உள்ளிட்ட 302 &nbsp;அம்சச் செயல் திட்டங்கள் அறிக்கை யில் இடம்பெற்றுள்ளன. ஜனநாயகத்தைப் பாதுகாக்க வும், தமிழக நலன்களை மீட்கவும் &lsquo;கதிர் அரிவாள்&rsquo; சின்னத்திற்கு வாக்க ளித்து வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுமாறு மக்களைக் கேட்டுக் &nbsp;கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். &nbsp;இந்நிகழ்வில் டி.எம்.மூர்த்தி, வஹிதா நிஜாம், டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.