செம்பனார்கோவில் வட்டாரப் பகுதியில் முந்திரி விளைச்சல் அமோகம்
16 May 2026, 10:20 pm
<p><strong>செம்பனார்கோவில் வட்டாரப் பகுதியில் முந்திரி விளைச்சல் அமோகம்</strong></p><p>மயிலாடுதுறை, மே 16- மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயமும், மீன்பிடித் தொழிலும் பிரதான தொழிலாக விளங்கி வருகிறது.</p><p> அதே நிலையில் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் முந்திரி விவசாயமும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு கைகொடுத்து வருகிறது. </p><p>குறிப்பாக கடலூர் மாவட்டம் பண்ருட்டி, நெய்வேலி, வடலூர் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதியில் விவசாயிகள் பலா விவசாயத்தைப் போன்று முந்திரி மரங்களை வளர்த்து விவசாயம் செய்து வருகின்றனர். </p><p>செம்பனார்கோவில் வட்டாரப் பகுதியான பொறையாறு, காழியப்பநல்லூர், திருவிடைக்கழி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் ஒரு சில விவசாயிகள் முந்திரி மரங்களை வளர்த்து வருகின்றனர். </p><p>இதுகுறித்து முந்திரி விவசாயிகள் சிலரிடம் பேசுகையில்,“60, 70 ஆண்டுகளுக்கு முன்பு தரங்கம்பாடி தாலுகா பகுதியில் நிறைய முந்திரி மரங்கள் காணப்பட்டன. </p><p>தற்போது அந்த மரங்களை விறகு மற்றும் செங்கல் சூளைக்காக அழித்து வருகின்றனர். </p><p>காழியப்பநல்லூர் பகுதியில் முன்னோர்கள் உண்டாக்கிய முந்திரி மரங்களை பாதுகாத்து வருகிறோம். </p><p>தற்போது சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் பழங்கள் காய்த்து கனியாக குலுங்குகிறது. </p><p>முந்திரி அறுவடை பணியை தொடங்கி உள்ளோம். முந்திரி பழம் என்பது முந்திரி மரத்தில் மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தில் பேரிக்காய் வடிவத்தில் இருக்கும். </p><p>இதில் ஆரஞ்சு பழத்தை விட ஐந்து மடங்கு அதிக வைட்டமின் சி, இரும்புச்சத்து மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளது. </p><p>பறித்த 24 மணி நேரத்திற்குள் சாப்பிட வேண்டிய இப்பழம், உடலுக்குக் குளிர்ச்சி தந்து, இரத்த சோகை மற்றும் செரிமானப் பிரச்சனைகளைச் சரிசெய்ய உதவுகிறது. </p><p>இதில் வைட்டமின் சி, பி, இ, கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. </p><p>நோய் எதிர்ப்பு சக்தி அதிக வைட்டமின் சி இருப்பதால் கிருமிநாசினியாகச் செயல்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இ</p><p>ரும்புச் சத்து நிறைந்துள்ளதால், ரத்த சோகையை போக்க உதவுகிறது. எலும்புகளை வலுப்படுத்தி, சரும ஆரோக்கியத்திற்கு நன்மை செய்கிறது.</p><p> ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இனிப்பு மற்றும் லேசான துவர்ப்பு கலந்த சுவை கொண்டது.</p><p>பழமாக உண்ணலாம், சாறு ஜாம் மற்றும் பழ பானங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. </p><p>முந்திரி பழத்தை பறித்த 24 மணி நேரத்திற்குள் சாப்பிட வேண்டும். இல்லையெனில் நீர் சத்து வெளியேறி அழுகிவிடும். </p><p>முந்திரி மரத்தின் உண்மையான பழம் அதன் அடியில் இருக்கும். தற்போது நாங்கள் முந்திரி பழங்களை கொட்டையுடன் அறுவடை செய்து வருகிறோம். </p><p>பெரியோர் முதல் சிறுவர்கள் வரை வாங்கிச் சாப்பிடுகின்றனர்” என தெரிவித்தனர்.</p>
