ரூ.2.5 கோடி மோசடி அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர், மனைவி மீது வழக்கு
16 Nov 2025, 3:30 pm
<p><strong>ரூ.2.5 கோடி மோசடி அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர், மனைவி மீது வழக்கு</strong></p>
<p>சென்னை, நவ. 16- அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2.5 கோடி மோசடி செய்ததாக அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கலாநிதி மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி மீது சென்னை மயி லாப்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தனசேகர் என்பவர், தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர் களுக்கு அரசு வேலை பெற்றுத் தர வேண் டும் என்ற நோக்கில், தான் நன்கு அறிந்தி ருந்த சென்னை அண்ணா பல்கலைக்கழ கத்தின் முன்னாள் துணைவேந்தர் கலா நிதி என்பவரிடம் சுமார் இரண்டரை கோடி ரூபாய் பணத்தைக் கொடுத்துள்ளார். தன சேகரிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்ட கலாநிதி, உறுதியளித்தபடி பல ஆண்டுகளாக யாருக்கும் அரசு வேலை வாங்கிக் கொடுக்காமல் காலத்தைக் கடத்தி வந்துள்ளார். மேலும், தனசேகருக்குச் சொந்தமான நிலத்தின் பத்திரங்களையும் கலாநிதி பெற்றுக் கொண்டுள்ளார். சில காலத் திற்குப் பிறகு, அந்த நிலப் பத்திரம் தொலைந்து விட்டதாகக் கூறி கலாநிதியே காவல் நிலையத்தில் புகாரும் அளித் துள்ளார். தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தனசேகர், இது குறித்து நேரடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். அத்துடன், சென்னை சைதாப் பேட்டை 18 ஆவது நீதிமன்றத்திலும் அவர் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். தன சேகரின் மனுவை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யு மாறு காவல்துறையினருக்கு உத்தர விட்டது. நீதிமன்றத்தின் இந்த அறிவுறுத்தலின் பேரில், சென்னை மயிலாப்பூர் காவல்து றையினர், முன்னாள் துணைவேந்தர் கலா நிதி மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி ஆகியோர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.</p>
