100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்
5 Feb 2026, 3:40 pm
<p><strong>100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்</strong></p>
<p>ஈரோடு, பிப்.5 பர்கூர் மலைப்பாதை யில் 100 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக் குள்ளானதில், காரில் பய ணித்த குடும்பத்தினர் நல் வாய்ப்பாக உயிர் தப்பி னர். திருச்சி மாவட்டம், சின் னக்கடை வீதியை சேர்ந்த வர் செந்தில்குமார் (45). இவரது மனைவி ஜெயஸ்ரீ (43). இவர்களின் மகள் பூரணிக்கு (17), கர்நாடக மாநிலம், மைசூருவிலுள்ள தனியார் கல்லூரியில் சேர்க்கைக்கு திருச்சியிலிருந்து மூவரும் காரில் புறப்பட்டனர். காரை செந்தில்குமார் ஓட்டிச் சென்றார். அந்தியூர் - பர்கூர் மலைப் பாதையில் இரண்டு கொண்டை ஊசி வளைவுகளுக்கும் இடையில் புதனன்று அதிகாலை கார் சென்றபோது, ஓட்டு நரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர தடுப்பைத் தாண்டி, 100 அடி பள்ளத்தில் உருண்டு மரத்தில் மோதி நின்றது. இதில் ஜெயஸ்ரீ, பூரணி ஆகியோா் பலத்த காய மடைந்தனர். இதையடுத்து அவ்வழியே சென்றவர்கள், பள் ளத்திலிருந்து மூவரையும் மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்து குறித்து பர்கூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
