தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மதத்தில் இருந்து வெளியேறாமல் ‘சாதி, மதம் இல்லை’ என சான்றிதழ் கோர முடியாது: உயர் நீதிமன்றம்

22 Feb 2026, 3:26 pm
மதத்தில் இருந்து வெளியேறாமல்  ‘சாதி, மதம் இல்லை’ என சான்றிதழ் கோர முடியாது: உயர் நீதிமன்றம்
<p><strong>மதத்தில் இருந்து வெளியேறாமல் &nbsp;&lsquo;சாதி, மதம் இல்லை&rsquo; என சான்றிதழ் கோர முடியாது: உயர் நீதிமன்றம்</strong></p> <p>மதுரை, பிப்.22 - சிவகங்கையைச் சேர்ந்த செல்வ &nbsp;மாணிக்கம், உயர் நீதிமன்ற மதுரை &nbsp;அமர்வில் தாக்கல் செய்த மனுவில், &nbsp;&ldquo;நான் சாதி மற்றும் மதம் இல்லை &nbsp;என சான்றிதழ் கேட்டு, திருப்பத்தூர் &nbsp;வட்டாட்சியரிடம் விண்ணப்பித் தேன். அவர் அவ்வாறு சான்றிதழ் வழங்குவது தொடர்பாக அரசின் உத்தரவு இல்லாததால் சான்றிதழ் வழங்க மறுத்து 2025 ஜூலை 9 ஆம் தேதி உத்தரவிட்டார். அவரது உத்த ரவை ரத்து செய்து எனக்கு சாதி &nbsp;மற்றும் மதம் இல்லை என சான்றிதழ் &nbsp;வழங்க உத்தரவிட வேண்டும்&rdquo; என &nbsp;கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதி &nbsp;கிருஷ்ணன் ராமசாமி பிறப்பித்த உத்தரவில், &ldquo;மனுதாரரின் பெற்றோ ரும், மனுதாரரும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். மனுதாரர் இந்து மதத்தை கைவிட்டு விட்டாரா என &nbsp;நீதிமன்றம் கேள்வி எழுப்பிய போது, அவர் அளித்த பதில் எதிர்மறையாக இருந்தது. மனுதாரர் &nbsp;இந்து மதத்தை கைவிடாமல் &lsquo;மதம், சாதி இல்லை&rsquo; என சான்றிதழ் &nbsp;கேட்டு அளிக்கும் விண்ணப்பத்தை அதிகாரிகளால் பரிசீலிக்க முடியாது. மனுதாரர் இந்து மதத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக எந்த &nbsp;ஆதாரத்தையும் தாக்கல் செய்ய வில்லை. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இருப்பினும் மனுதாரர் தனது மதத்தில் இருந்து வெளியேறியதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்தால், அதை அதி காரிகள் விதிமுறைகளை பின்பற்றி &nbsp;பரிசீலிக்கலாம். விதிகள் இல்லா விட்டால் தேவையான விதிகளை உருவாக்கிய பிறகு மனுதாரரின் விண்ணப்பத்தை பரிசீலிக்கலாம்&rdquo; எனக் கூறியுள்ளார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.