காங்கேயம் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வேட்பாளர் மு.பெ.சாமிநாதனுக்கு வரவேற்பு
4 Apr 2026, 4:02 pm
<p><strong>காங்கேயம் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வேட்பாளர் மு.பெ.சாமிநாதனுக்கு வரவேற்பு</strong></p>
<p>திருப்பூர், ஏப்.4 - காங்கேயம் சட்டப்பேரவை தொகு தியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்ட ணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மு.பெ.சாமிநாதன் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கே யம் தாலுகா அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்து, நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். வேட்பாளர் மு.பெ.சாமிநாதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கேயம் தாலுகா குழு அலுவலகத் தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் வரவேற்ற னர். மார்க்சிஸ்ட் கட்சியின் காங்கேயம் தாலுகா செயலாளர் எம்.கணேசன் பூங் கொத்து கொடுத்து வரவேற்றார் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வேட்பாளர் சாமிநாதனுக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர். மேலும், மாவட்ட துணைச் செயலாளர் ராசி முத்து, காங்கேயம் தெற்கு ஒன்றியச் செயலாளர் கே கே.சிவானந்தன், காங் கேயம் நகர செயலாளர் வசந்தம். சேமலைப்பன் ஆகியோருக்கும் பய னாடை அணிவித்து வரவேற்பு அளிக் கப்பட்டது. இதில், கட்சியின் தாலுகா குழு உறுப்பினர் பி.கருப்புசாமி, நல்லி கவுண்டர்வலசு கிளைச் செயலாளர் பி.வேலுச்சாமி, வெள்ளகோவில் டவுன் கிளை செயலாளர் எம்.சரவணகுமார் ஆகியோர் வரவேற்று மகிழ்ந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கேயம் தாலுகா பொறுப்புச் செய லாளர் இரா.செல்வராஜ் அறிமுகப்ப டுத்தி உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த திரளா னோர் கலந்து கொண்டனர் கட்சியின் காங்கேயம் தாலுகா குழு உறுப்பினர் ஆர்.வின்சென்ட நன்றி கூறினார்.</p>
<p> </p>
