தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பெண்களுக்கான புற்றுநோய் பரிசோதனை மருத்துவ வாகன சேவை விரைவில் தொடக்கம்

9 Nov 2025, 2:37 pm
பெண்களுக்கான புற்றுநோய் பரிசோதனை  மருத்துவ வாகன சேவை விரைவில் தொடக்கம்
<p><strong>பெண்களுக்கான புற்றுநோய் பரிசோதனை &nbsp;மருத்துவ வாகன சேவை விரைவில் தொடக்கம்</strong></p> <p>சென்னை, நவ.9 - பெண்களுக்கான புற்றுநோய் பரிசோதனைக் கான மருத்துவ வாகன சேவை விரைவில் தமிழகத் தில் தொடங்கப்படவுள்ளதாக மருத்துவம் மற்றும் &nbsp;மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், &ldquo;முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், பெண் சிசுக்கொலையை தடுப்பது, குழந்தை திருமணத்தை தடுப்பது மற்றும் &nbsp;பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்து வதை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு &nbsp;வருவதாகக் கூறினார். இதற்கு முன்பு ஆண்டு வரு மான வரம்பு ரூ.72 ஆயிரம் என்று இருந்ததை தற்போது ரூ.1 லட்சம் 20 ஆயிரம் என உயர்த்தப் பட்டுள்ளதாகவும், கருத்தடை செய்பவர்களின் வயது வரம்பு 40-லிருந்து 49 ஆக உயர்த்தப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், பெண் களின் நல்வாழ்வுக்கான வாகனச் சேவை விரை வில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அமைச் சர் அறிவித்தார். &nbsp;பெண்களை புற்றுநோய் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதற்காக கருப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் உள்ளிட்ட எட்டு வகையான புற்றுநோய் பாதிப்புகளுக்கான முழுமையான பரி சோதனைகளை செய்யக் கூடிய வகையில் ஒவ் வொரு மாவட்டத்திற்கும் வாகனங்கள் அனுப்பப்ப டும் என்று அவர் கூறினார். &nbsp;38 மாவட்டங்களுக்கும் 38 வாகனங்களை வடி வமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக வும், இன்னும் பத்து நாட்களில் முதலமைச்சரால் அவை திறந்து வைக்கப்பட உள்ளதாகவும் அவர் &nbsp;தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.