கேரள உள்ளாட்சித் தேர்தல் முதற்கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது
7 Dec 2025, 3:52 pm
<p><strong>கேரள உள்ளாட்சித் தேர்தல் முதற்கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது</strong></p>
<p>திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் டிச. 9 மற்றும் 11 ஆகிய தேதி களில் இரண்டு கட்ட மாக உள்ளாட்சித் தேர்தல் நடை பெறும் என அம்மாநில தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித் தது. அதன்படி டிச 9., அன்று நடை பெற உள்ள முதல் கட்ட தேர்த லில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட் டயம், இடுக்கி மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் உள்ள உள்ளா ட்சி அமைப்புகளுக்கு செவ்வா யன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் ஞாயிறன்று ஓய்ந்தது. 7 மாவட்டங்க ளில் 1.32 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலுக்கான முன்னேற்பாடு கள் நிறைவடைந்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் ஏ.ஷாஜகான் அறிவித்தார். சட்டம் ஒழுங்கு பிரச்ச னைகளைத் தவிர்க்க முன்னெச்ச ரிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டமாக, திருச்சூர் முதல் காசர்கோடு வரையிலான 7 மாவட்டங்களில் வாக்குப்பதிவு டிசம்பர் 11 ஆம் தேதி நடைபெறும். 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப் பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள் ளன. உள்ளூர் வளர்ச்சியின் முது கெலும்பாக இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடு மற் றும் கடந்த ஒன்பதரை ஆண்டு களில் மாநிலம் முழுவதும் ஏற் பட்டுள்ள வளர்ச்சி குறித்து முக்கிய விவாதம் தேர்தல் களத்தில் நடை பெற்றது. ஆட்சியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை முன்வைத்து வாக்காளர்களை எல்டிஎப் (இடது ஜனநாயக முன்னணி) நம்பிக்கை யுடன் சந்தி்த்தது. யுடிஎப்பும் (காங்கி ரஸ் கூட்டணி), பாஜகவும் தற்காப்பு நிலையில் உள்ளன. ராகுல் மாங் கூட்டத்திலின் பாலியல் வன் கொடுமை வழக்குகள் வெளிச்சத் திற்கு வந்தபோது ஜமாத்-இ-இஸ் லாமி உடனான யுடிஎப் கூட்டணி மக்களிடமிருந்து பெரும் எதி ர்ப்பைச் சந்தித்து வருகிறது. பெங்க ளூர் நில மோசடியில் பாஜக தலை வர் ராஜீவ் சந்திரசேகர் மற்றும் பெரிங்கமலா கூட்டுறவு வங்கி ஊழலில் பொதுச் செயலாளர் எஸ். சுரேஷ் ஆகியோர் சிக்கியுள்ளதால், பாஜகவால் வாக்காளர்களை எதிர் கொள்ள முடியவில்லை.</p>
