தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

3 மாநிலங்களில் பிரச்சாரம் ஓய்ந்தது: செங்கொடிகளால் சிவந்த கேரளம்!

8 Apr 2026, 5:30 am
3 மாநிலங்களில் பிரச்சாரம் ஓய்ந்தது: செங்கொடிகளால் சிவந்த கேரளம்!
<p><strong>3 மாநிலங்களில் பிரச்சாரம் ஓய்ந்தது: செங்கொடிகளால் சிவந்த கேரளம்!</strong></p><p>திருவனந்தபுரம், ஏப். 7 - 140 தொகுதிகளைக் கொண்ட கேரளம், 126 தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலங்களிலும், 30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும், சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 9 அன்று நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த 3 மாநிலங்களிலும் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.</p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியிலுள்ள கட்சிகளின் அணிகள் பறக்கும் பிரச்சாரம், கேரள மாநிலத்தின் மூலை முடுக்குகெங்கும் எதிரொலித்தது. செங்கொடிகளால் கேரளம் சிவந்தது. ரோடு ஷோக்கள், பேரணிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் கேரளம் அதிர மாலை 5 மணிக்கு அங்கு பிரச்சாரம் ஓய்ந்தது.</p><p>அதேபோல எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ஐக்கிய ஜனநாயக முன்னணி (காங்கிரஸ், சிபிஎம்) கூட்டணியின் வலுவான இறுதிக்கட்ட பிரச்சாரத்துடன் அசாமிலும் மாலை 5 மணிக்கு பிரச்சாரம் ஓய்ந்தது. புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், எளிமையான மக்கள் சந்திப்பு, வீடுகள் தோறும் வாக்குசேகரிப்பு நடைபெற்றது. பிரச்சாரம் நிறைவடைந்த பின்பு அசாம், கேரளம், புதுச்சேரி மாநிலங்களில் தொகுதிச் சம்பந்தமில்லாத நபர்கள் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.