முந்தய பக்கம்

மானாமதுரையில் வாக்கு சேகரிப்பு “பெண்களை இழிவுபடுத்தியவர் எதிர் வேட்பாளர்”

9 Apr 2026, 5:30 am
மானாமதுரையில் வாக்கு சேகரிப்பு “பெண்களை இழிவுபடுத்தியவர் எதிர் வேட்பாளர்”
<p><strong>மானாமதுரையில் வாக்கு சேகரிப்பு “பெண்களை இழிவுபடுத்தியவர் எதிர் வேட்பாளர்”</strong></p><p>மானாமதுரை, ஏப்.8- மானாமதுரை நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, பெண்களை இழிவுபடுத்தியவரே நமக்கு எதிராக நிற்கும் வேட்பாளர் என திமுக வேட்பாளர் தமிழரசி ரவிக்குமார் குற்றஞ்சாட்டினார்.</p><p>மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழரசி ரவிக்குமார், மானாமதுரை நகரில் வீதி வீதியாக சென்று மக்களிடம் வாக்குச் சேகரித்தார். அப்போது, பொதுமக்களிடம் பேசிய அவர், பெண்களுக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் வெளியிட்டவர் தான் எதிர்க்கட்சியின் வேட்பாளர் என்று தெரிவித்தார்.</p><p>இந்த பிரச்சாரத்தில் திமுக நகர செயலாளர் பொன்னுச்சாமி, நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, திமுக ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 14வது வார்டு திமுக உறுப்பினர் சதீஷ்குமார் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram