வெற்றிலை பாக்கு வைத்து வாக்களிக்க அழைப்பு
26 Mar 2026, 2:46 pm
<p><strong>வெற்றிலை பாக்கு வைத்து வாக்களிக்க அழைப்பு</strong></p>
<p>ஸ்ரீவில்லிபுத்தூர், மார்ச் 26- தமிழக சட்டமன்ற தேர் தல் ஏப்ரல் 23 அன்று நடை பெற இருப்பதை ஒட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதி முழுவதும் 100 சதவீத வாக்க ளிப்பின் அவசியத்தை வலி யுறுத்தும் வகையில் நக ராட்சி நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடை பெற்று வருகின்றன. அதனொரு பகுதியாக புதன்கிழமை இளம் தலை முறை வாக்காளர்கள், மூத்த வாக்காளர்கள், புதிய வாக் காளர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உட்பட அனைத்து வாக்காளர்களுக் கும் நகராட்சியின் சார்பில் அழைப்பிதழ்களோடு வெற் றிலை பாக்கு வைத்து வாக் குப் பதிவில் பங்கேற்க அழைக்கப்பட்டது. ஜோதிராம் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து இந்த நிகழ்வு தொடங்கியது. முதன் முதலாக மூத்த வாக்காளர் களுக்கு வெற்றிலை பாக் கோடு அழைப்பிதழ் வழங் கப்பட்டது. தொடர்ந்து அனைத்து வாக்காளர்களு க்கும் அழைப்பிதழ் வழங்கப் பட்டது. ஆணையாளர் குமார் தலைமை தாங்கினார். நகர அமைப்பு அலுவலர் வெங்கடேசன், சுகாதார அலு வலர் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
