பேருந்து பழுதாகி நின்றதால் நெரிசல்
31 Mar 2026, 4:50 pm
<p><strong>பேருந்து பழுதாகி நின்றதால் நெரிசல்</strong></p>
<p>தருமபுரி, மார்ச் 31- குமாரசாமிபேட்டை ரயில்வே மேம்பாலத்தில் அரசு நகரப் பேருந்து பழுதாகி நின்றதால், போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. தருமபுரி புதிய பேருந்து நிலையம் கடந்த பிப்.5 ஆம் தேதியன்று பயன்பாட்டிற்கு வந்தது. அங்கிருந்து கிருஷ்ணகிரி, சேலம், பென்னாகரம், பாலக்கோடு, பெங்களூரு, ஒசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிக ளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தருமபுரி பழைய பேருந்து நிலையத்திலிருந்து அரூர், ஊத்தங்கரை, பாப்பிரெட்டிப்பட்டி, திருவண்ணா மலை, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்து கள் இயக்கப்படுகின்றன. பயணிகள் வசதிக்காக புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களுக்கு இடையே அரசு நகரப் பேருந்துகள் மற்றும் தனியார் சிற்றுந்து கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், திங்களன்று இரவு புதிய பேருந்து நிலையத்திலிருந்து, பழைய பேருந்து நிலையத்துக்கு இயக்கப்பட்ட அரசு நகரப் பேருந்து ஒன்று, குமாரசாமி பேட்டை ரயில்வே பாலத்தின் மேல் சென்று கொண்டி ருந்தது. அப்போது, பேருந்து திடீரென பழுதாகி நின்ற தால், பயணிகள் உடனடியாக இறக்கி விடப்பட்ட னர். பேருந்தை நகர்த்த முடியாததால், பாலத்தின் மேல் நடுவழியில் வைத்தே பழுதை சரி செய்தனர். ஏற் கெனவே இவ்வழியில் போக்குவரத்து நெருக்கடி உள்ள நிலையில், இதன் காரணமாக கடும் போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டி களும், பயணிகளும் அவதிக்குள்ளாகினர்.</p>
