ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள்
31 Jan 2026, 5:27 pm
<p><strong>ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள்</strong></p>
<p>நாமக்கல், ஜன.31- குமாரபாளையம் ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்கி அசத்தினர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சேலம் பைபாஸ் சாலையில், தனியார் கல்லூரியின் பின்புறம் குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி சனி யன்று நடைபெற்றது. 500-க்கும் மேற்பட்ட மாடுகள் 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் உள்ளிட்டோர் இந்த போட்டியில் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் வினோத் குமார் வரவேற்றார். தமிழ்நாடு ஜல்லிகட்டு பேரவை தலைவர் ராஜசேகர் தலைமை வகித்தார். திமுக மாநில அமைப்பு செய லர் பாரதி, ஈரோடு எம்.பி. பிரகாஷ், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மூர்த்தி ஆகியோர் கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்தனர். முன்னதாக ஆர்.டி.ஓ. லெனின் உறுதி மொழி வாசிக்க, மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். சீறி வந்த காளைகளை, வீரர்கள் அடக்கி அசத்தினர். மாடு களும் வீரர்கள் கையில் சிக்காமல் சீறி பாய்ந்தது. இதனை காண பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். காலை 9 மணிக்கு துவங்கிய ஜல்லிக் கட்டு போட்டி மாலை 4 மணி அளவில் நிறைவு பெற்றது. மேலும் ஜல்லிக்கட்டு போட்டியில் அசம்பாவித சம்பவங்கள் தவிர்க் கப்பட்ட நிலையில், காயமடைந்த ஒரு சில வீரர்களுக்கு உட னடி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.</p>
