தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

7 Mar 2026, 2:36 pm
திருச்சி விரைவு செய்திகள்
<p><strong>4 மாவட்டங்களில் கைப்பற்றப்பட்ட &nbsp;389 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு</strong></p> <p>தஞ்சாவூர், மார்ச் 7 - தஞ்சாவூர் அருகே நான்கு மாவட்ட காவல்துறையின ரால் கைப்பற்றப்பட்ட 389 கிலோ எடையிலான கஞ்சா போதைப்பொருள் தீயிட்டு அழிக்கப்பட்டது. தஞ்சை சரகத்திற்கு உட்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் போதைப் பொருட்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பல்வேறு அதிரடி சோதனையில், பதிவு செய்யப்பட்ட கஞ்சா வழக்குகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சா போதை பொருட்கள் நீதிமன்ற உத்தரவுப்படி, தஞ்சை சரக காவ&zwnj;ல்துறை துணைத் தலைவர் ஜியாவுல் ஹக் தலைமையில், திருவையாறு உட்கோட்டம் செங்கிப்பட்டி அருகே அயோத்திப்பட்டியில் உள்ள மெடிக்கேர் என்விரோ சிஸ்டம் என்ற நிறுவனத்தில், நவீன &nbsp;இயந்திரம் மூலம் தீயிட்டு அழிக்கப்பட்டது. இதில், தஞ்சை மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட 82.863 &nbsp;கிலோ, திருவாரூர் மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட 23.620 &nbsp;கிலோ, நாகப்பட்டினம் மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட 272.950 கிலோ, மயிலாடுதுறை மாவட்டத்தில் கைப்பற்றப் பட்ட 9.825 கிலோ என மொத்தம் 389.258 கிலோ அடங்கும். இந்நிகழ்வில், தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார், தஞ்சாவூர் மதுவிலக்கு அம லாக்கப் பிரிவு துணைக் கண்காணிப்பாளர், தஞ்சை சரகத் திற்கு உட்பட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.&nbsp;</p> <p><strong>வாரச் சந்தையில் இடம்பிடிக்க &nbsp;விடிய விடிய காத்திருந்த வியாபாரிகள் அரியலூர்</strong></p> <p>, மார்ச் 7- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உடை யார்பாளையம் பேரூராட்சி சார்பில் கலைஞர் நகர்ப்புற &nbsp;மேம்பாடு திட்டம் 2022-2023 திட்டத்தில் ரூ.270 லட்சத்தில் திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உடையார்பா ளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் &nbsp;புதிதாக வாரச் சந்தை கட்டப்பட்டுள்ளது. இந்த வாரச் சந்தை சனிக்கிழமை திறக்கப்பட இருந்தது. இந்நிலை யில் இரவிலிருந்து உடையார்பா ளையத்தைச் சுற்றி யுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த வியாபாரிகள், விவ சாயிகள் &nbsp;500-க்கும் மேற்பட்டோர் வாரச் சந்தையில் இடம் &nbsp;பிடிப்பதற்காக விடியும் வரை காத்திருந்தனர்.</p> <p><strong>வழிச்சாலை பணிக்கு அடிக்கல்</strong></p> <p>அரியலூர், மார்ச் 7 - முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் அரியலூர்-காரைக்குறிச்சி இரு வழிச்சாலையை நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிக்கு வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் கலந்து கொண்ட போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை &nbsp;அமைச்சர் சா.சி.சிவசங்கர், முதலமைச்சரின் சாலை மேம் பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.45 கோடியில் அரியலூர்-முத்து வாஞ்சேரி-ஸ்ரீபுரந்தான்-காரைக்குறிச்சி சாலை கி.மீ 6/4-12/4 வரை இருவழித் தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக &nbsp;அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல் பணிக்கு அடிக்கல் நாட்டி, பணியை தொடக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி, சட்டப் பேரவை &nbsp;உறுப்பினர் கு.சின்னப்பா, நெடுஞ்சாலைத் துறை கோட்டப் &nbsp;பொறியாளர் வடிவேல் மற்றும் உதவி கோட்டப் பொறியா ளர்கள், உதவி பொறியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p> <p><strong>பெருங்காடு கிராமத்தில் மாட்டுவண்டி எல்கை பந்தயம் </strong></p> <p>அறந்தாங்கி, மார்ச் 7 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த பெருங்காடு கிராமத்தில் உள்ள ஸ்ரீ முக்கன் ஆலய சந்தன காப்பு அபிஷேகத்தையொட்டி 3 ஆம் ஆண்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. &nbsp;இந்த போட்டியில் மதுரை, திருச்சி, தஞ்சாவூர், புதுக் கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரப்பட்ட மாட்டு வண்டிகள் போட்டியில் கலந்து கொண்டன. பெரிய மாடு, &nbsp;நடுமாடு, கரிச்சான்மாடு என மூன்று பிரிவுகளாக நடை பெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட ஜோடி இரட்டை மாட்டு &nbsp;வண்டிகள் கலந்து கொண்டு நிர்ணயிக்கப்பட்ட பந்தய இலக்கினை நோக்கிச் சென்றன. &nbsp;போட்டியில் வெற்றி பெற்ற ஒவ்வொரு பிரிவுகளி லும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாட்டின் உரிமை யாளர்களுக்கு ரூ.2.23 லட்சம் ரொக்கப் பரிசும் கோப்பை களும், சிறப்பு பரிசாக தட்டு வண்டி மற்றும் தங்க நாண யம் வழங்கப்பட்டது. ஆவுடையார்கோவில் காவல் துறை யினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.