பிஎஸ்என்எல் ஊழியர்கள் மாலை நேரத் தர்ணா...
22 Jul 2026, 11:43 pm
<p><strong>பிஎஸ்என்எல் ஊழியர்கள் மாலை நேரத் தர்ணா...</strong></p><p>ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலை பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் மாலை நேரத் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளைத் தலைவர் கே. சேகர் தலைமை தாங்கிய இப்போராட்டத்தில், மாநில நிர்வாகிகள் சி. ஞானசேகரன், பி. மாரிமுத்து, மாநில உதவிப் பொருளாளர் பி. சரவணன், மாவட்டச் செயலாளர் பி. முருகன் மற்றும் விவசாயிகள் சங்க நிர்வாகி ப.செல்வன், சாந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.</p>
