பிரிக்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் ஈரான் மீதான போர் குறித்த விவாதம்
14 May 2026, 9:47 pm
<p><strong>பிரிக்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் ஈரான் மீதான போர் குறித்த விவாதம்</strong></p><p>புதுதில்லி, மே 14 - செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள 18 ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு முன்னதான அவ்வமைப்பின் வெளி யுறவுத்துறை அமைச்சர்களின் இரண்டு நாள் கூட்டம் தில்லியில் வியாழக்கிழமை (மே 14) துவங்கியது. </p><p>ஈரான் போர் மற்றும் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளது தொடர்பான விவாதங்கள் இக்கூட்டத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளன.</p><p> ஈரான் மீதான போர் 76-வது நாளை எட்டியுள்ள நிலையில், இது பிரிக்ஸ் நாடு களிடையே பிளவுகளை ஏற்படுத்தி யுள்ளது. </p><p>குறிப்பாக ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இடையே நிலவும் மோதல்கள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. </p><p>ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ள நிலையில் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள எரிசக்தி தட்டுப்பாடு, எரிபொருள் விலை உயர்வு இக்கூட்டத்தில் முக்கிய விவாதமாக உள்ளது. </p><p>இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தனது உரையில், சர்வ தேச கடல் பகுதிகளில் “பாதுகாப்பான மற்றும் தடையற்ற கடல்சார் போக்கு வரத்து” நடைபெற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். </p><p>ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் “சட்ட விரோத ஆக்கிரமிப்பை” கண்டிக்க வேண்டும் என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, பிரிக்ஸ் உறுப்பு நாடுகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p> ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லவ்ரவ், தென்னாப்பிரிக்காவின் ரொனால்ட் லமோலா, பிரேசிலின் மௌரோ வியேரா ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். </p><p>டிரம்ப் சீனா சென்றுள்ளதால் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, இக்கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என கூறப்படு கிறது. </p><p>எனினும் அந்நாட்டின் தூதர் சூ பெய்ஹாங் பங்கேற்றுள்ளார். </p><p>காசா மீதான இஸ்ரேலின் போர் குறித்த விவாதங்களிலும் பிரிக்ஸ் நாடுகளிடையே ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. </p><p>இந்தப் பேச்சுவார்த்தைகளே நடைபெறவுள்ள 18 ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கான அடித்தளமாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
