மூளைச்சாவு ஏற்பட்ட வாலிபரின் உடலுறுப்புகள் தானம்
11 May 2026, 12:17 am
<p><strong>மூளைச்சாவு ஏற்பட்ட வாலிபரின் உடலுறுப்புகள் தானம்</strong></p><p>கோவை, மே 10- மூளைச்சாவு ஏற்பட்ட ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இளைஞரின் உட லுறுப்புகள் தானம் செய்யப்பட்டன. </p><p>ஈரோடு மாவட்டம், கொரதோட்டம் மெள்ளகோவில்பாளையத்தை சேர்ந்த வர் கார்த்திக் குமார் (27).</p><p> இவர் கடந்த வியாழனன்று மாலை இருசக்கர வாக னத்தில் சென்றபோது, எதிர்பாராத வித மாக கீழே விழுந்து விபத்துக்குள்ளா னார். </p><p>இதில் தலையில் பலத்த காயம டைந்த கார்த்திக் குமார், மேல் சிகிச் சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். </p><p>அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும், சிகிச்சை பலனின்றி கார்த்திக் குமா ருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத் துவர்கள் தெரிவித்தனர். </p><p>இக்கட்டான சூழலிலும் கார்த்திக் குமாரின் குடும் பத்தினர் அவரது உடலுறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். </p><p>இதை யடுத்து அறுவை சிகிச்சை மூலம் உட லுறுப்புகள் சேகரிக்கப்பட்டன. </p><p>இதயம் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. </p><p>ஒரு சிறுநீரகம் மற்றும் கண்கள் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறு நீரகம் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங் கப்பட்டன. </p><p>இதைத்தொடர்ந்து, கார்த் திக் குமாரின் உடலுக்கு மருத்துவமனை முதல்வர், இருப்பிட மருத்துவ அதி காரி, செவிலியர்கள் மற்றும் பணியா ளர்கள் ஞாயிறன்று மலர் வளையம் வைத்து அரசு மரியாதை செலுத்தினர்.</p><p>பின்னர் அவரது உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.</p>
