முந்தய பக்கம்

விவசாயிகளுக்கு விரோதமான பாஜக-அதிமுக கூட்டணியைப் புறக்கணிப்போம்!

2 Apr 2026, 5:30 am
விவசாயிகளுக்கு விரோதமான பாஜக-அதிமுக கூட்டணியைப் புறக்கணிப்போம்!
<p><strong>விவசாயிகளுக்கு விரோதமான பாஜக-அதிமுக கூட்டணியைப் புறக்கணிப்போம்!</strong></p><p>சென்னை, ஏப். 1- விவசாயிகளுக்கு விரோதமான கொள்கைகளைத் தொடர்ந்து கடைபிடித்து வரும் பாஜக மற்றும் அதற்குத் துணை நிற்கும் அதிமுக கூட்டணியைப் புறக்கணித்து, திமுக-இடதுசாரிகள் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.</p><p>இது குறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமி. நடராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சீரழிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், விவசாயிகளுக்கு எதிராகவும் சட்டங்கள் இயற்றப்படுகின்றன.</p><p>குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படவில்லை. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர். எனவே, இந்தத் தேர்தலில் விவசாய விரோதக் கூட்டணியைப் புறக்கணிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram