புத்தகத் திருவிழாவில் ரூ.1.25 கோடி புத்தகம் விற்பனை
3 Feb 2026, 4:00 pm
<p><strong>புத்தகத் திருவிழாவில் ரூ.1.25 கோடி புத்தகம் விற்பனை</strong></p>
<p>திருப்பூர், பிப்.3- 22 ஆவது திருப்பூர் புத்தகத் திரு விழாவில் ஏறத்தாழ ஒரு லட்சம் பார்வையாளர்கள் வருகை தந்த னர். ரூ.1.25 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையானது என்று புத்தகக் கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரி வித்தனர். தமிழ்நாடு அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் திருப்பூர் பின்னல் புக் ட்ரஸ்ட் இணைந்து 22 ஆவது திருப்பூர் புத்தகத் திரு விழாவை மொத்தம் 11 நாட்கள் நடத் திய நிலையில், செவ்வாயன்று நிறைவு பெற்றது. இப்புத்தகத் திருவிழாவை முன் னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் பல் வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட மாணவ மாணவியர் கலை இலக் கிய திறனாய்வு போட்டிகளில் 10 ஆயிரத்து 500 பேர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து வினாடி வினா, அச்சு ஓவியப்போட்டி போன்றவை நடத்தப்பட்டதில் மழலைகள் உட் பட 2500 பேர் பங்கேற்றனர். இந்த ஆண்டு புத்தகக் கண்காட் சியை ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் பார்வையிட்டு சென்றுள்ளனர். பெண்கள், குழந்தைகள், இளை ஞர்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் இங்கு வருகை தந்த னர். இந்த ஆண்டு புத்தகக் கண் காட்சியில் பங்கேற்ற பதிப்பகங்கள் மற்றும் விற்பனையாளர்களிடம் சேகரிக்கப்பட்ட தகவலின் அடிப் படையில் ரூ. 1 கோடியே 25 லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் விற்பனை யானதாக புத்தகத் திருவிழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். புத்தகத் திருவிழா நடைபெற்ற வேலன் ஹோட்டல் மைதானத்தில் திருவள்ளுவர், பகத்சிங், அம்பேத் கர், பெரியார், அண்ணா, கலைஞர், விவேகானந்தர் உள்ளிட்ட படங்கள் கொண்ட தற்பட முனையம் (செல்பி கார்னர்) அமைக்கப்பட்டிருந்தது. இங்கு குழந்தைகள் முதல் பெரிய வர்கள் வரை பல்லாயிரக்கணக்கா னோர் ஆர்வமுடன் தற்படம் எடுத் துச் சென்றனர்.</p>
