புத்தக வாசிப்பு இயக்கம்
2 Dec 2025, 4:11 pm
<p><strong>புத்தக வாசிப்பு இயக்கம்</strong></p>
<p>திருச்சிராப்பள்ளி, டிச.2- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில துணைத் தலைவர் எழுதிய `அழகனும் அழகிகளும்’ புத்தக வாசிப்பு இயக்கம் ஞாயிறன்று திருச்சியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சீத்தா வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். பெண்கள் கிளைத் தலைவர் பாலின் வரவேற்றார். பெண்கள் கிளைச் செயலாளர் செசிலி சிறப்புரை ஆற்றினார். மாநில துணைத்தலைவர் நீலா கள அனுபவங்கள் குறித்து பேசினார். மலைக்கோட்டை கிளை பொருளாளர் சந்திரா நன்றி கூறினார்.<br />
</p>
