ஏவிசி கல்லூரியில் நூல் வெளியீட்டு விழா
1 Feb 2026, 3:51 pm
<p><strong>ஏவிசி கல்லூரியில் நூல் வெளியீட்டு விழா</strong></p>
<p>மயிலாடுதுறை, பிப்.1 - ஏ.வி.சி. கல்லூரி பொருளியல் துறையின் முன்னாள் பேராசிரியர் ஆர் வரதராஜன் (93) பற்றிய “பொருளியல் பேராசிரியர் ஆர். வரதராஜனார்- வாழ்வும் தொண்டும்” என்ற நூல் வெளியீட்டு விழா கல்லூரி வளாகத் தில் நடைபெற்றது. நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரி மற்றும் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் கே.வெங்கடராமன் கலந்து கொண்டு நூலினை வெளியிட்டு சிறப்புரை யாற்றினார். முன்னதாக பொருளியல் துறையின் முன்னாள் பேராசிரியர் எஸ். சிவபுண்ணியம் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி கணிதத் துறை முன்னாள் பேராசிரியர் எஸ்.சிவரா மன் வாழ்த்துரை வழங்கினார். நூலின் முதல் பிரதியை முன்னாள் பேராசிரியர் டாக்டர் கே.இளங்கோவன் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து நூலாசிரியர் எஸ். பாஸ்கர், முன்னாள் பொருளியல் துறை மாணவர் மற்றும் முன்னாள் உதவி இயக்குநர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக நூலா சிரியர் உரையாற்றி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்வில் தர்மபுரம் கலைக் கல்லூரி யின் செயலர் டாக்டர் ஆர்.செல்வநாயகம் உள்ளிட்ட பலர் வாழ்த்திப் பேசினார். முன்னாள் கருவூலக்கணக்கு அலுவலர் ஆர். ராஜா நன்றி கூறினார்.</p>
