அரசுப்பள்ளியில் புத்தகக் கண்காட்சி
15 Nov 2025, 4:09 pm
<p><strong>அரசுப்பள்ளியில் புத்தகக் கண்காட்சி</strong></p>
<p>பொள்ளாச்சி, நவ.15- சோமந்துறை, சித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா மற்றும் புத்தகக் கண்காட்சி நடை பெற்றது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த சோமந்துறை சித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வெள்ளியன்று குழந்தைகள் தின விழா கொண்டாடப் பட்டது. இந்நிகழ்வில், பள்ளியின் வாசிப்பு இயக்கத்தின் சார்பாக புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. இதில், மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு புத்தகங் களை பார்வையிட்டு வாங்கிச் சென்றனர். அதோடு ஒவ் வொரு வகுப்பறையும் ஒரு மரக்கன்று என்ற விதத்தில் ஆசிரியர்களுடன் இணைந்து பள்ளி வளாகத்தில் மரக் கன்றுகள் நடப்பட்டு, அதற்கு தனக்கு பிடித்தமான பெயர் சூட்டி மகிழ்ந்தனர். பின்னர், மாணவர்களின் தனித் திறமை வெளிப்படும் விதமாக கலை இலக்கிய நிகழ்ச்சி கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. முடிவில், தமிழாசிரியை விஜயலட்சுமி நன்றி கூறி னார்.</p>
<p> </p>
