முந்தய பக்கம்

யமுனை நதியில் படகு கவிழ்ந்து விபத்து 6 பேர் உயிரிழப்பு

11 Apr 2026, 5:30 am
யமுனை நதியில் படகு கவிழ்ந்து விபத்து 6 பேர் உயிரிழப்பு
<p><strong>யமுனை நதியில் படகு கவிழ்ந்து விபத்து 6 பேர் உயிரிழப்பு</strong></p><p>உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள யமுனை ஆற்றில் 30 சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற படகு பெருந்தூண் பாலம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காவல்துறை மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.</p><p>வெளியானது மாலை 6 மணி நிலவரப்படி 6 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். 14 பேர் உயிருடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.</p><p>இந்த சம்பவம் தொடர்பாக மதுரா மாவட்ட ஆட்சியர் சந்திரபிரகாஷ் சிங் கூறுகையில், &quot;இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. விபத்துக்குள்ளான குழுவினர் பஞ்சாப்பிலிருந்து யமுனை நதியைச் சுற்றிப் பார்க்க வந்தவர்கள்&quot; என அவர் கூறினார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p>
Share
FacebookXWhatsAppTelegram