தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பா.ஜ.க-வின் 'சங்கல்ப பத்ரா': சோனார் பங்களாவா? 'சொப்பன' பங்களாவா?

11 Apr 2026, 5:30 am
பா.ஜ.க-வின் 'சங்கல்ப பத்ரா': சோனார் பங்களாவா? 'சொப்பன' பங்களாவா?
<p><strong>பா.ஜ.க-வின் &#39;சங்கல்ப பத்ரா&#39;: சோனார் பங்களாவா? &#39;சொப்பன&#39; பங்களாவா?</strong></p><p>மேற்கு வங்கத் தேர்தல் தொடங்கியுள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை கொல்கத்தாவில் வெளியிட்டுள்ள &#39;சங்கல்ப பத்ரா&#39; (தேர்தல் அறிக்கை), அரசியல் விமர்சகர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 15 ஆண்டுகால மம்தா ஆட்சியின் &#39;கனவுத் தொல்லை&#39; என்று வர்ணிக்கும் பா.ஜ.க, தான் முன்வைத்துள்ள திட்டங்கள் மூலம் வங்காளத்தைத் &#39;தங்க வங்காளமாக&#39; (சோனார் பங்களா) மாற்றப்போவதாக கதை அளந்துள்ளது. ஆனால், அந்த அறிக்கையைச் சற்று ஆழமாகத் தோண்டிப் பார்த்தால் தெரிவது தங்கம் அல்ல, துருப்பிடித்த பழைய அரசியல் உத்திகளே!</p><p>ஊருக்கு ஒரு நீதி: பா.ஜ.க-வுக்கு ஒரு நீதியா? தமிழகத்தில் திமுக இலவச திட்டங்களை அறிவித்தால், உடனே தில்லியிலிருந்து &#39;பொருளாதார மேதைகள்&#39; கிளம்பி விடுவார்கள். &quot;இலவசங்களால் மாநில திவாலாகிவிடும், இது நாட்டின் பொருளாதாரத்திற்கே பேராபத்து&quot; என்று கூச்சல் போடும் இதே பா.ஜ.க, இப்போது மேற்கு வங்கத்தில் மட்டும் &#39;வள்ளல்&#39; வேடம் பூண்டுள்ளது.</p><p>பெண்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய், வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய், மாநில அரசு ஊழியர்களுக்கு 45 நாட்களில் ஏழாவது ஊதியக் குழு எனப் பா.ஜ.க அள்ளி வீசியுள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் &#39;இலவசக் கலாச்சாரம்&#39; என்று ஏளனம் பேசும் பா.ஜ.க, இப்போது வாக்குக்காக இலவச திட்டங்களை வாரி வழங்குவதாகக் கூறுவது அவர்களின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியுள்ளது. &quot;தமிழகத்திற்கு ஒரு நீதி, பா.ஜ.க-வுக்கு ஒரு நீதியா?&quot; என்று மக்கள் கேட்கத் தொடங்கிவிட்டனர்.</p><p>91 லட்சம் பேர் நீக்கம்: இன்னும் முடியாத ஊடுருவல் அரசியல்! பா.ஜ.க-வின் நிரந்தரப் &#39;புச்சாண்டியான&#39; ஊடுருவல் விவகாரம் மீண்டும் கையில் எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில், சுமார் 91 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இத்தனை பேரை நீக்கிய பிறகும், இன்னும் &quot;கண்டறி, நீக்கு, நாடுகடத்து&quot; என்று முழங்குவது நகைப்புக்குரியது. உண்மையில் இது ஊடுருவல்காரர்களுக்கான எச்சரிக்கை அல்ல; மாறாக, சிறுபான்மையினரை அச்சுறுத்தி வாக்குகளைப் பிரிக்கும் ஒரு மலிவான அரசியல் உத்தியாகும்.</p><p>யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்கப் போகிறார்கள்? &quot;காடுகளுடன் கடத்தப்படுவதைத் தடுப்போம்&quot; என்று அமித் ஷா வீராவேசம் பேசியிருக்கிறார். ஆனால் வரலாறு சொல்வது வேறு. கடந்த காலங்களில் எல்லை வழியாக வங்கதேசத்திற்குக் கால்நடைகளைக் கடத்திய வழக்குகளில் பா.ஜ.க பிரமுகர்களே சிக்கியது அம்பலமானது. &quot;வேலியே பயிரை மேய்ந்த கதையாக&quot;, தங்களுக்குள் இருக்கும் கடத்தல் புள்ளிகளைக் கட்டுப்படுத்தாமல், யாரிடமிருந்து யாரைக் காப்பாற்றப் போகிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.</p><p>முடக்கப்பட்ட 100 நாள் வேலைத் திட்டம் இடதுசாரிகளின் கடும் நிர்ப்பந்தத்தால் கொண்டுவரப்பட்ட &#39;100 நாள் வேலை உறுதி திட்டத்திற்கு&#39; ஒன்றிய பா.ஜ.க அரசு போதிய நிதி ஒதுக்காமல் முடக்கி வருகிறது. கிராமப்புற மக்களின் வயிற்றிலடிக்கும் பா.ஜ.க, இப்போது தேர்தல் நேரத்தில் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்குவதாகக் கூறுவது வேடிக்கையானது. அமித் ஷா கூறும் &#39;சோனார் பங்களா&#39; என்பது வெறும் தேர்தல் நேரத்துத் &#39;திருவிளையாடல்&#39; என்பதை வங்காள மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர். மொத்தத்தில், இந்தத் தேர்தல் அறிக்கை &#39;தங்கப் பங்களா&#39;வுக்கான வரைபடம் அல்ல, மக்களை ஏமாற்றப் போடப்பட்ட &#39;கனவு&#39; கோட்டை!</p><p>அ. விஜயகுமார்</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.