பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை தென்காசி நகராட்சிக் கூட்டத்தில் பாஜக பெண் கவுன்சிலர் புகார்
8 Mar 2026, 3:42 pm
<p><strong>பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை தென்காசி நகராட்சிக் கூட்டத்தில் பாஜக பெண் கவுன்சிலர் புகார்</strong></p>
<p>தென்காசி, மார்ச் 8 - தென்காசி நகராட்சிக் கூட்டம் சனிக்கிழமை நகராட்சித் தலைவர் ஆர்.சாதிர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தென்காசி நகராட்சி பகுதியின் வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் குடிநீர் தொடர் பான விவாதங்கள் நடைபெற்றது. அப்போது பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 23ஆவது வார்டு நகரமன்ற உறுப்பி னர் சுனிதா பேசுகையில், “கடந்த நான்கு ஆண்டுகளாக நகர்மன்றத்தில் எனது வார்டு பகுதிக்கு தேவையான பணிகள் தொடர்பாக விவாதித்துள்ளேன். ஆனால் எனது கட்சி யில் என்னை ஒதுக்கி வைத்து விட்டனர். அதையும் பொறுமையாக ஏற்றுக்கொண்டு எனது பணிகளை செய்து வந்தேன். இந்த சூழலில் என்னைப்பற்றி வலைதளங்களில் நகர பாஜகவினர் அவதூறு பரப்பி வரு கின்றனர். இது தொடர்பாக பாஜக நகரத் தலைவர் மற்றும் மாவட்டத் தலைவருக்கு தகவல் தெரிவித்தும் எந்தவொரு நடவ டிக்கையும் மேற்கொள்ளவில்லை. பாஜக வில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” என்று கூறினார். பாஜக நகரத் தலைவராகவும் கவுன்சில ராகவும் உள்ள சங்கர சுப்பிரமணியனும் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், அவர் முன்பாகவே பாஜக பெண் கவுன்சிலர், பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று புகார் தெரிவித்துப் பேசி யது, தென்காசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
